Monthly Archives: December 2013

Non Muslims about Islam !

“The rise of Islam is perhaps the most amazing event in human history. Springing from a land and a people like previously negligible, Islam spread within a century over half the earth, shattering great empires, overthrowing long established religions, remoulding the souls of races, and building up a whole new world – world of Islam. 

– Niha –

Source: Web

ப’ பா ஆகின்றது!

படித்துத்தான் பாருங்களே !

ப வில் படி என்றதுமே அது மிதிப்பதா நிறுப்பதா
படிப்பதா எ்லலாமே இப்போது குறுக்கமே என்றதே!

ப வில் போ என்றதுமே போலிகள் நிறைந்துள்ளதால்
போர்த்துதலும் கூடி பார்த்திடவும் சகிக்கலையே என்றதே!

ப வில் போ எனவே போர்பற்றிப் பேசாதீர்
போரின் நாற்றம் நாளுக்குநாள் நாறுகிறதென்றதே! Continue reading

பதிப்பில் வராத கிடப்புகள்… ஏ.கே.அப்துல் ரஹ்மான் என்ற அன்பரால் எழுதப்பட்ட ‘திருகுர்ஆனின் அறிவியல் சான்றுகள்’ என்ற புத்தகத்தின் முதலாம் அத்தியாயத்தில் பிரபஞ்சம் பற்றிய குர்ஆன் வசனங்களுக்கு அவர் தந்துள்ள கணிதசூத்திர முரண்பாடு பற்றி குர்ஆனின் வழியில் ஆய்வு !

ஏ.கே.அப்துல் ரஹ்மான் என்ற அன்பரால் எழுதப்பட்ட
‘திருகுர்ஆனின் அறிவியல் சான்றுகள்’ என்ற புத்தகத்தின் முதலாம் அத்தியாயத்தில் பிரபஞ்சம் பற்றிய குர்ஆன் வசனங்களுக்கு
அவர் தந்துள்ள கணிதசூத்திர முரண்பாடு பற்றி
குர்ஆனின் வழியில் ஆய்வு !

மேற்கண்ட ஆசிரியரால், நேரம்பற்றிய ஓர் சூத்திரம் வசனம் 16:77இலிருந்து உருவாக்கப்படுகிறது. அக்குர்ஆன் வசனம்: ‘வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதைவிடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.’ Continue reading

வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்குகள் கொடுக்கும் நோக்கு, பெற்றவர்
போக்கையே முற்றாக மாற்றி விடுகின்றது!

நோட்டுகளுக்காக அளிக்கப்படும் வாக்குகள்
புறோநோட்டாகப் பார்க்கப்படுவதில்லை!

போடவேண்டுமெனப் போடும் வாக்குகள்
நாடுகளையே அழிக்க உதவியுள்ளன! Continue reading

அறு சுவைகளின் குணம்!

சாப்பிடும் ஒழுங்கு!

முதலில் இனிப்பு. அடுத்து, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, இறுதியில் துவர்ப்பு. இப்படி சாப்பிடுவதனால் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும்.

உண்டபின்….

- தயிரும், உப்பும் கலந்துண்டால், உணவில் கலந்துள்ள வாத, பித்த,         ரசங்கள் எனும் முக்குற்றங்களும் நீங்கிடும்.
- நோய் தோன்றுவதற்கான காரணிகள் அகன்று விடும்.

அறுசுவைகளை உண்டால் மாத்திரம் போதாது, சில வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
- உரிய காலத்தில் உண்ணல்.
- சூரியோதய, அஸ்தமண காலத்தில் உண்பதைத் தவிர்த்தல்.
- கோபம், கவலை, துக்க நேரங்களில் உணவு உட்கொளாது தவிர்த்தல்.
- நின்று கொண்டு, கையை ஊன்றிக் கொண்டு உண்பதை விலக்கல்.

உண்ணலும் திசைகளும்:
- கிழக்கு நோக்கியிருந்து உண்டால் ஆயள் அதிகரிப்பு
- தெற்காயின் புகழ்
- மேற்காயின் செல்வம்
- வடக்காயின் அழிவு

எங்கோ, எப்போதோ வாசித்தறிந்தவை!

- நிஹா -

வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்குகளை ஞாபகமூட்ட அவதரித்த தூதரனைவரும்
தோற்றுப்போன இடமும் அதுவே!

பிரபஞ்ச மனைத்தும் இறை வாக்கால்
பிரயாணித்துக் கொண்டிருப்பனவே!

இறைவாக்கு படைப்பின் மூலம்.
மனித வாக்கு கிடப்பின் அவலம்! Continue reading

அறிந்தவை பத்து!

தற்போதைய தேர்தல் முறை ஒழியும் வரை
நல்ல தலைவர்களைக் காணமுடியாது.

தற்கால அரசியல், மக்களைக் கொன்று 
மக்கள் தலைவராகும் நற்பரிமானம்.

தற்கால விந்தை, மக்களை வஞ்சித்து, உயிரை உறிஞ்சி,
மக்கள் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறுவது. Continue reading

‘ப’ பா ஆகின்றது!

படித்துத்தான் பாருங்களே!

ப வில் பக்தர் பற்றிப் பேசுமுன்னே
பக்தியை விற்றுப் பலநாளான கதை கூறுகின்றதே!

ப வில் பக்தர் என்றதுமே பக்தர் என்போர்
பித்தராகிக் கடித்துக்குதறி அலைகின்றன என்றதே!

ப வில் பண்பு என்றேனே பார்க்கலாம் பரதேசிகள் உலகில்
பண்பு பற்றிக் கூற என்னவுளதோ என்றதுவே! Continue reading