Monthly Archives: September 2013

ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேதங்களும

இன்று நாம் பார்க்கும் இந்து சமயத்தைத் தமது மார்க்கமாகக் கொண்டுள்ள மக்கள், பல தெய்வக் கோட்பாடுகளுக்குள் தம்மை முழு மையாக ஆழ்த்திக் கொண்டுள்ளனர் என்பதை நாடெங்கிலும் காணப்படும் வெவ்வேறு தெய்வங்களுக்கான கோயில்களும், நாள் தவறாது நடைபெறும் திருவிழாக்களும், மற்றுமுள்ளவைகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக் கின்றன. இவைகள்தான் இந்து சமய வேதங்கள் கூறும் கொள்கைகளா என எண்ணிப் பார்த்தால் விடை எதிரிடையான தாகவே காணப்படுவதை அவதானிக்கலாம்.

இந்து சமயம் என நாமழைக்கும் இந்த பெயர், இடைப்பட்ட காலத்தில் வெள்ளயைர்கள் ஆட்சிக் காலத்தில், அவர்களால் சனாதன தர்மத்துக்குக் கொடுக்கப்பட்டதாகவே தெரிகின்றது. இந்து மத வேதங்கள்தான் ஆதியானவை அல்லது ஆதி மதத்துக்கு அடுத்தபடியாகத் தோன்றியவையாக இருக்க வேண்டும். ஆயினும், நிச்சயமாக, முக்கிய மூன்று வேதங்களான தோறா, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றுக்கும் முந்தியதாகவே உள்ளது. இதற்குப் பிந்திய வேதங்கள் யாவும் யாரோ ஒரு இறை தூதர் மூலம் இறைவனால் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இந்து வேதங்கள் மட்டும் ஒரு புறநடையாகவே இருப்பதையும் அவதானிக்கலாம். Continue reading

விரோதியின் வீழ்ச்சியில் விதைக்கப்படும் எழுச்சி நிலையானதா?

இந்த தலையங்கம் பரந்துபட்ட உண்மைகளைத் தன்மேல் தாங்கி நிற்பது. அவை அனைத்தையும் விளக்கப் புகின் எனது இலக்கின் நோக்கம் தடம் மாறிவிடும் என்பதால் தடுமாற்றம் தவிர்க்க, விளக்கத்துக்குத் தேவையான அளவில் குறிப்பிட்ட சில உண்மைகளைச் சுருக்கமாக எழுதவுள்ளேன். உய்த்துணரின் உண்மை விளங்கும்.

ஓன்று இருக்கும் இடத்தில் இன்னொன்று இருப்பதில்லை என்பது பொது விதி. ஓன்றின் அழிவிலேயே இன்னொன்று உருவாகின்றது எனவும் கூறலாம். இயற்கை உண்மையில் இப்பாடத்தை நமக்குக் கற்றுத் தந்துள்ளதா என்றால், அது நமது விளக்கத்தின் பிழையே தவிர வேறில்லை என்றே கூற வேண்டியுள்ளது. மனிதன் உலகில் எதனையும் புதிதாகப் படைத்து விடுவது இல்லை. ஒன்றில் நாம் அறியாதிருந்தவைகள் தாமாக வெளிப்பட்டிருக்கும் அல்லது புறத் தூண்டல்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அன்றேல் ஒன்றில் இருந்து இன்னொன்று உருவாகி அல்லது உருவாக்கப்பட்டு இருக்கும். உருவமாற்றம், அல்லது கலப்பு நடந்திருக்கும். ஆயினும் அங்கு எதுவும் முற்றாக அழிந்து விடுவதில்லை. அதனாலேயே மனிதன் அழிந்ததாக நமக்குத் தெரிந்தாலும் அவனது எச்சங்கள் அதனையே வெளிப்படுத்த வல்லன என்ற விஞ்ஞான உண்மைகள் விளம்பி நிற்கும். விதிவிலக்குகளும் உண்டே. இந்த அழிவுகளும் ஆக்கங்களும் பல்வேறு வழிகளில் கையாளப்படுகின்றன. Continue reading

Names of PHOBIAs and Explanations

Names of  PHOBIAs and Explanations

Research proves that 60 per cent of women fake an orgasm during intercourse. Which clearly proves that if you are scared of having sex, then you are not the only one.

And not just women, many men too (as against the popular misconception) can fear sex. But what are the different kinds of sex-related phobias that people have? We explore… Continue reading

அல்லாஹ் கூறும் தொழுகையாளிகளின் பண்புகள்.

குர் ஆன் வழியில் …

அல்லாஹ் கூறும் தொழுகையாளிகளின் பண்புகள்.

புனித குர்ஆனில் நரகம் அழைக்கும் மனிதர்களை சுருக்கமாக புறமுதுகு காட்டிப் புறக்கணித்தவன், சேமித்துப் பதுக்கிக் கொண்டவன், தீங்கொன்று அவனைத் தொட்டால் பதறுகிறவனாக, நன்மை தொட்டால் தடுத்துக் கொள்கிறவனாக எனக் கூறிவிட்டு, அப்படி அழைக்கப்படாதோர் வரிசையில் தொழுகையாளிகளைக் குறிப்பிட்டுள்ளான். 70:21 தொழுகையாளி களைத் தவிர எனக் கூறுவதைக் கவனிக்க. மேலும், அதே வரிசையில் அத்தொழுகையாளிகள் எத்தகையவர்கள் என அவர்களின் பண்புகளை விளாவாரியாகத் தெரிவித்துள்ளான். Continue reading

முஸ்லிம்கள் குர்ஆனைப் புறக்கணித்துவிட்டு எங்கே சென்று கொண்டிருக்கின்றனர்?

கட்டுரையுள் புகமுன் அறிதலுக்காகச் சில ஆயத்துக்கள் … ‘இன்னும், ஈமான் கொண்டு, நற்செயல்களை ஆற்றி, முஹம்மது (ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்டதை, அது தங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ள உண்மையாய் இருக்கும் நிலையில் ஈமான் கொண்டார்களோ, அவர்களின் தீமைகளை, அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலைமையையும் அவன் சீராக்கிவிட்டான்.’ – 49:2.

‘அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்த்திட வேண்டாமா? அல்லது, இதயங்கள் மீது பூட்டு இருக்கின்றனவா?’ – 47:24.

‘இ(ந்த குர்ஆனான)து மனிதர்களுக்கு எத்திவைத்தாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், மேலும் அவன் ஓரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லறிவு பெற்றிடவுமாகும்’ – 14:52.

‘மேலும், இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களால் கற்பனை செய்யப்பட்டதல்ல. அன்றியும், முன் உள்ளதை உண்மைப்படுத்துவதாகவும், வேதத்தை விவரிப்பதாகவும் இருக்கிறது. அகிலத்தாரின் ரப்பிடமிருந்துள்ள இதில் எந்த சந்தேகமும் இல்லை.’ – 10:37

‘நிச்சயமாக இந்தக் குர்ஆன், எது மிக மிக நேர்மையானதோ அதன்பால் நேர்வழி காட்டுகின்றது. அன்றியும், நற்செயல் செய்துவரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் கூலி உண்டென்று நற்செய்தி கூறுகிறது’ – 17:9. Continue reading

நீரரருந்தும் முறையையும் உடல் நலமும்

நீரரருந்தும் முறையையும் உடல் நலமும்
சரியான நேரங்களில் குறித்த அளவு நீரை முறையாக எடுப்பதன் மூலம் எமது உடலின் செயற்பாட்டுத்திறனை சீராகப் பேண முடிகின்றது.
கீழ்க்காணும் வழிமுறையை நீங்களும் பின்பற்றிப் பயன் பெற முடியும்.
1. இரண்டு கிளாஸ் நீர், காலை எழுந்தவுடன் குடித்தல். இது உங்களது உடல் செயற்பாட்டிற்கு வருவதற்கு உதவுகின்றது.
2. ஒரு கிளாஸ் நீர், சாப்பிடுவதற்கு (அரை மணி ) முன்னர் இது சமிபாட்டை இலகு படுத்துகின்றது.
3. சாப்பிட்டுகொண்டிருக்கும் சமயத்தில் ஒரு போதும் தண்ணீர் அருந்துவது சிறந்ததல்ல.
4. ஒரு கிளாஸ் நீர், குளிப்பதற்கு முன்னர் குடித்தல். இது இரத்தஅழுத்தம் சீராகஇருப்பதற்கு உதவுகின்ற து
5. ஒரு கிளாஸ், நீர் நித்திரைக்கு முன் இது மாரடைப்பு, பக்கவாதம் என்பன ஏற்படுவதைத் தவிர்க்கிறது. அழகாகவும், ஆரோக்கியமாகவும்,இருக்க,

Classification of blood pressure for adults

During each heartbeat, blood pressure varies between a maximum (systolic) and a minimum (diastolic) pressure.

Classification of blood pressure for adults

according to the American Heart Association

Category

Systolic

Diastolic

Hypotension

< 90

< 60

Desirable

90–119

60–79

Prehypertension

120–139

or 80–89

Stage 1 Hypertension

140–159

or 90–99

Stage 2 Hypertension

160–179

or 100–109

Hypertensive Crisis

≥ 180

or ≥ 110

அல்லாஹ்வுக்கு உவமை ஏற்படுத்தாதீர் !

குர்ஆன் வழியில் …

அல்லாஹ்வுக்கு உவமை ஏற்படுத்தாதீர் !

அல்லாஹ் பற்றி அறிந்து கொள்வது ஷிர்க் என்ற இணைவைப்பை வருவிக்காதிருக்கும். அல்லாஹ் தான் விரும்பினால், தனது கருணையைக் கொண்டு மானுடரின் அனைத்துக் குற்றங்களையும் மன்னிப்பான். ஆனால் தனக்கு இணை வைப்பதை அவன் எக்காரணங் கொண்டும் மன்னிக்கமாட்டான். அதனால் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியங்களையாவது நாம் அறிந்து வைத்திருத்தல் ஷிர்க்கிலிருந்து நம்மை விலக்கி இறைதண்டனையில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

அந்த வகையில் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை சரிவரப் புரிந்து ஈமான் கொண்டோமாயின் ஷிர்க்கில் இருந்து விலகிக் கொள்ளலாம். மேற்கண்ட தலைப்புக்கு ஆதாரமாக நிறைய குர்ஆனிய வசனங்கள் இருப்பினும் அது நேரடியாக உணர்த்தும் வசனம் ஒன்றை முதலில் பதிவாக்குகிறேன். ‘அவனைப் போன்று எப்பொருளும் இல்லை’. இந்த வசனம் மிகத் தெளிவானது. அவனைப் போன்று எப்பொருளும் இல்லை- 42:11 என்ற போது, அவன் இப்படி இருப்பான், அப்படி இருப்பான், அங்கு இருக்கிறான், இங்கு இருக்கிறான். வானத்தில் இருக்கிறான், பூமியில் இருக்கிறான் போன்றவாறு நினைப்பதோ, கூறுவதோ ஷிர்க் என்பதை மக்கள் அறியாமல் இருப்பது அவனது மன்னிப்பை ஹறாமாக்கிவிடுவது. Continue reading

உலக மாற்றங்களுக்கும், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளுக்கும், மனித நாகரிகத்துக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருக்கின்றதா புனித குர்ஆன் !

உலக மாற்றங்களுக்கும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், மனித நாகரிகத்துக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருக்கின்றதா புனித குர்ஆன் !

அசைவற்று, மாற்றங்காணாத எப்பொருளும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. அசையாது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மலைகளும் தன்னில் மாற்றத்தை ஏற்று, ஏற்படுத்திக் கொண்டிருப்பனவே! அசையாதது போன்று தோற்றமளிக்கும் உலகம் உட்பட அனைத்துக் கிரகங்களும், நட்சத்திரங்களும் அசைந்து கொண்டும், சுழன்று கொண்டும், பயணித்துக் கொண்டும், வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டும் இருக்கின்றன என்பதை ஓரளவாவது மக்கள் தற்போது அறிந்தே இருக்கின்றார்கள்.

ஏன் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா கூட ஒவ்வொரு ஷணமும் தான் ஓர் மாட்சியில் இருப்பதாகக் கூறுகிறான். மேற்கண்ட உண்மைகளைக் கூட, அல்லாஹ் தன்மாமறையில் மிக நாசூக்காக பல்வேறு வசனங்களில் கூறியேயுள்ளான் என்பதே இந்த தலைப்பிற்கு விடையாக அமையும். அதற்கு மேலும், அனைத்தும் தாம் விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருக்கின்றன. சிரம் சாய்க்கின்றன. அவற்றின் துதியை நீங்கள் விளங்கிக் கொள்கிறவர்களாக இல்லை எனக் கூறும் குர்ஆனிய வசனமே இதற்குச் சான்றாகும். விஞ்ஞானமும் அதனை ஏற்றுள்ளதை, அண்மைய கண்டு பிடிப்புக்களான Big Bang, Theory of Crunch, Tachyon ( Hypothetical particle that travels faster than the light travels ) போன்றவை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. Continue reading