Monthly Archives: March 2015

மரம் ஒரு வரம், அறிவோம், மறவோம், மதிப்போம்!

மரம் ஒரு வரம் –  அறிவோம், மறவோம், மதிப்போம்!

 

நிழலையும் தரும் பச்சை மரந்திலிருந்துதான்
நெருப்பையும் தந்தான் இறைவன் என்ற
முத்தான உண்மையை சத்தான வித்துவம் தந்து
எரித்து மகிழ விறகாயும் மாறியது மரம்தான்

எட்டமுடியா நெட்டையாக வளர்வதும் மரம்தான்
தொட்டிடுமளவு குட்டையாய் மாறுவதும் மரமேதான்
கட்டிப் பிடிக்க முடியா பெருக்காய் வளர்ந்ததும் மரம்தான்
வெட்டிட முடியா பெரு வைராமாய் மாறியதும் மரம்தான்!  Continue reading

மார்க்க போதனை என்ற பெயரில் அன்பு அழிக்கப்படுகின்றதா! வம்பு வளர்க்கப்படுகின்றதா!

மார்க்க போதனை என்ற பெயரில் அன்பு அழிக்கப்படுகின்றதா! வம்பு வளர்க்கப்படுகின்றதா!

 

 

அன்பு உலக மார்க்கம் என்று கூறின் அது மிகையல்ல. அல்லாஹ் தன்னை நிகரற்ற அன்புடையவன் என விழிப்பதில் இருந்து அன்பை உலக மார்க்கம் எனக் கூறின் அது மிகையல்ல என்பது தெளிவு. அன்பு பற்றி எது பேசவில்லையோ அது மார்க்கமும் அல்ல. அன்பு காட்டாதவன் மனிதனுமல்ல, இறைவனுமல்ல! அன்பே சிவம் என்போரும் உண்டே! அன்புதான் இன்ப ஊற்று என்று ஆதங்கப்பட்டவன் அசோகச் சக்கரவர்த்தியே!

உலகில் ஒரு பொதுவான வரியற்ற, ஆனால் முகபாவம் என்ற வரிவடிவமுடைய பாஷையை இறைவன் படைத்திருக்கிறான் என்றால், அது அன்பு என்ற பாஷையே தவிர இல்லை. Continue reading

Bee Honey a medicine for all தேன் சர்வலோகிலும் சர்வரோக நிவாரணி!

தேன் சர்வலோகிலும் சர்வரோக நிவாரணி!

 

 

உடல் கட்டியையும் உடைக்கும்
உடற் காயத்தையும் ஆற்றிவிடும்
மட்டற்ற சேவை மகிழ்வாகச் செய்து
கெட்டிடாது உதவும் கேடும் விழைக்காது!

களைப்பையும் எளிதாய்ப்போக்கிவிடும்
இளைப்பு தரும் சளியையும் அழித்து விடும்
சோர்வையும் அகற்றி சோம்பலைப் போக்கி
பார்வையைத் துலக்கிடும் பயன்தரும் நாளும்! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் – 4:112

எவரேனும், தவறையோ, பாவத்தையோ சம்பாதித்து, பின்னர் அதைக் குற்றமற்றவர் மீது வீசியால், அப்பொழுது அவதூறையும், வெளிப்படையான பாவத்தையும் அவர் நிச்சயமாகச் சுமந்து கொள்கின்றார்.

 

- நிஹா -

 

Al Quran – 4:112

But if anyone earns, a fault or a sin and throws it on to one  that is innocent, he carries a false charge and a flagrant sin.  

 

- niha -