Monthly Archives: September 2014

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

அல் குர்ஆன் 50:37

நிச்சயமாக எவருக்கு இதயம் இருக்கிறதோ அவருக்கு, அல்லது தாம் மன ஓர்மையுடன் செவி சாய்க்கின்றாரோ, அவருக்கு அதில் படிப்பினை உள்ளது. Continue reading

காவியும் பாவியும் !

காவியும் பாவியும் !

 

காவியுள் புகுந்தது புத்தர் அன்று
கர்மம் தொலைத்து காமம் அறுக்க
காவியுள் இன்று காவாலிகள் புகுந்து
காடைத்தனங்களை மேடை ஏற்றுறார்!

காவியில் பாவிகள் படுத்திடும் பாடு
காவியாய் காலிகள் விளைத்திடும் கேடு
தாவியே தாமும் கூவியே நிதமும்
நோவினை செய்வதை நாவினிற் கொண்டார்! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 42:15

 

அதற்காக நீர் அழைப்பீராக! நீர் ஏவப்படட பிரகாரம் நிலைத்து நிற்பீராக! அவர்களது மனோஇச்சைகளை நீர் பின்பற்றாதீர். இன்னும், நீர் கூறுவீராக! “அல்லாஹ் வேதத்திலிருந்து இறக்கி வைத்ததையே நான் ஈமான் கொண்டேன். உங்களுக்கு மத்தியில் நீதமாகவே தீர்ப்பளிக்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ் எங்களது ரப்பும் உங்களது ரப்புமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்குமிடையே எந்தவித தர்க்கமுமில்லை, அல்லாஹ் நம்மிடையே ஒன்று சேர்ப்பான். அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.” Continue reading

சிறுநீரக கல்லுக்கு எலுமிச்சை சாறு!!

சிறுநீரக கல்லுக்கு எலுமிச்சை சாறு!

 

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்
.
இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!
ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!
அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.
பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி.
1. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), 
2. பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy)
மற்றும் 
3. லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.
“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.

- niha -

from web

 

நற்சிந்தனை 24

நற்சிந்தனை 24

தங்களுடைய ரப்பை அவனுடைய திருப்பொருத்தத்தை – வஜ்ஹை/முகத்தை – நாடி காலையிலும் மாலையிலும் அழைத்துக் கொண்டிருப்போரை நீர் விரட்டி விடாதீர். அவர்களுடைய கணக்கில் நின்றும் உம்முடைய கணக்கிலிருந்து அவர்கள் மீது ஏதுமில்லை. ஆகவே நீர் விரட்டினால் நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் : 5:87

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்தவற்றில், தூய்மையானவற்றை நீங்கள் விலக்கப்பட்டவைக ளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக, அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.

– நிஹா -

 

Al Quran 5:87

 

O ye who believe! Make not unlawful the good things which Allah hath made lawful for you. But commit no excess: For Allah loveth not those given to excess.

 Read 5:88 also

 

- niha -

 

 

 

 

 

 

 

நற்சிந்தனை – 23

நற்சிந்தனை – 23

முகநூலில் “குர்ஆன் முழுமையானது“ என்ற வலையில் தொழுகை பற்றிய பதிவொன்றில் கொடுக்கப்பட்ட கருத்துப் பதிவு

குர்ஆன் முழுமையானது. ஆம் அல்லாஹ் சம்பூரணமாக்கியுள்ளதாகக் கூறி விட்டான். இந்த உண்மை ஒன்றே போதும் குர்ஆன் முழுமையாக அணுகப்பட வேண்டிய ஓர் உன்னதக் கருவூலம் என்பதை உணர. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட அடிப்படை உண்மையை மையப்படுத்தி மற்றைய இம்மை, மறுமைக்கான அனைத்தையும் கூறி இருக்கின்றது. அதனால், மற்றைய அனைத்தையும் அறிய, உணர, நடைமுறைப்படுத்த முற்படும் ஒருவர் அதனடிப்படையோடு முரண்படாத, அவ்வடிப்படையை முன்னிறுத்தியதாக மற்றைய அனைத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி விளங்காதோரை ஊர்வனவற்றில் மிக மோசமானதாகக் கூறுகின்றான். விளங்காகதோர் மீது வேதனையை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றான். Continue reading

மருந்தாகும் உணவு!

மருந்தாகும் உணவு!

கொலஸ்ட்ரோலை குணமாக்க
கோரைக் கிழங்கு பவுடர்! 

இன்று உலகை உலுக்கி வரும் உபாதையான மாரடைப்புக்கு முக்கிய காரணிகளில் ஒ்னறாக உள்ளது கொலஸ்ட்ரோல் என்ற கொழுப்பே!

இதி்ல் கெட்ட கொலஸ்ரோல் எல்டீஎல் என்பது குருதியில் கலந்து வெளியேறிடாது, ஆங்காங்கே நரம்புகளில் தங்கி, அவற்றினைக் குறுகலாக்குவதுடன் அடைப்புக்களையும் ஏற்படுத்தி மரணத்தையும் விளைவித்து விடுகின்றது.

அதனால், கொலஸ்ட்ரோலை உணவால் கட்டுப்பாட்டுள் வைத்திருக்கும் முறைகள் நன்மை பயப்பன. அவற்றில் மிக முக்கயமான நடைமுறையாக பசிக்காமல், மற்றும் செரிமானமற்ற நிலையில் புசிக்கும் ‌ பழக்கத்தைத் தவிரத்துக் கொள்ளல் அவசியம்.

உணவாக, மோர் அருந்தி வருதல் இலகுவாகக் கெட்ட கொலஸ்ட்ரோலை வெளியேற்றும் எளிய முறையாகும்.

சாப்பிட்டவுடன் சுடுநீர் குடிக்க வேண்டும. அதிலும் சிறிது மிளகும், இஞசியும் இடித்துப் போட்டு அவித்த சுடுநீரைக் குடிப்பது கொலஸ்ட்ரோலைக் குறைக்க உதவும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு அருந்துவது மற்றொரு உண்ணும் முறை. 

கோரைக் கிழங்கு பவுடர் கிடைக்குமாயின் அதில் ஒரு கரண்டி, அரை கிளாஸ் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து கால் வாசியாகக் குறைந்த பின்னர், காலையும் மாலையும் உணவுக்கு முன்னர் அருந்திவ‌ர நன்மை பயக்கும்.

 

தொகுப்பு – நிஹா

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 13:22

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் ரப்பின் திருப் பொருத்தத்தை நாடிப் பொறுமையைக் கடைப்  பிடிப்பார்கள். தொழுகையை நிலை நிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றில் இருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்வார்கள். தீமையை, நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கேதான் மறுமையின் வீடு இருக்கிறது.

- நிஹா -

 

Al Quran 13:22

Those who patiently persevere, seeking the countenance of their Lord; establish regular prayers; spend, out of We have bestowed for their sustenance, secretly and openly; and turn off Evil with good: for such there is the final attainment of the (Eternal) Home. 

- niha -