Daily Archives: November 20, 2013

ARTHRITIS

ARTHRITIS ஆதரைட்டிஸ் தினமும் காலை, மாலை ஒரு கப் வெந்நீரில் இரு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி கறுவாப்பட்டை தூள் சாப்படலாம். தொடர்ந்து சாப்பிட்டுவர கடுமையான ஆதரை ட்டிஸ் சுகமாகும். Continue reading

மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை.

குர் ஆன் வழியில் …

மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை.

இன்னும் உம்முடைய ரப்பு நாடியிருந்தால், பூமியிலுள்ள அனைவருமே ஈமான் கொண்டிருப்பார்கள். எனவே, மனிதர்களை அவர்கள் முஸ்லிம்களாகிட வேண்டும் என்று நீர் கட்டாயப்படுத்த முடியுமா? இது அல் குர்ஆன் 10:99 இல் அல்லாஹ் எழுப்பிய கேள்வி. அவன் தனது வேதத்தைப் பரப்புவதற்குக்கூட நிர்ப்பந்தத்தை விரும்பவில்லை. பலவந்தத்தால் சாதிக்கும் காரியங்கள் நிலைப்பதில்லை. விசேடமாக ஈமான் என்ற நம்பிக்கையைப் பலவந்தத்தின் மூலம் அளிப்பதனால் எதிர்பார்த்த இலக்கை எட்டுவதைக் காண முடியாது. பலவந்தத்தின், அல்லது அல்லாஹ்வின் திறமையால் ஏற்பட்ட பலனாகவே இருக்கும். அதனால் உண்மை நிலை வெளிப்படப் போவதில்லை. ஆக அவன் அறிவு பூர்வமாக ஈமான் ஏற்படுவதையே விரும்பி இருக்கிறான். அத்தோடு, மற்றைய படைப்புக்களைப் போலல்லாது மனிதனுக்கு அவன் பிரித்தறியும் அறிவான ஆறாவதறிவைக் கொடுத்து, பூரண சுதந்திரத்தையும் அளித்துள்ளான். நன்மை எது? தீமை எது? என்பதைக் கண்டறியும் உரிமை அவர்களிடமே விடப்பட்டுள்ளதால், மறுமையில் அவரவர் செய்தவற்றுக்குரிய கூலி கொடுப்பதில் தயவு தாட்சன்யம் இருக்காததுடன், அதனை யாரும் எதிர்பார்க்கவும் இயலாது. தாமே தம் நிலையை நன்கு அறிந்து கொள்வர். Continue reading

Lesser known facts about Libya and Gaddafi !

1. There is no electricity bill in Libya; electricity is free for all its citizens.

2. There is no interest on loans, banks in Libya are state-owned and loans given to all its citizens at 0% interest by law.

3. Home considered a human right in Libya – Gaddafi vowed that his parents would not get a house until everyone in Libya had a home. Gaddafi’s father has died while him, his wife and his mother are still living in a tent. Continue reading

அறவழி நடந்திட அறிவுரை சில

மீந்ததை ஈந்தால் எழிலாம் தர்மம்,
ஈந்தது மீந்தால் முழுமையாம் தியாகம்.

ஈந்ததை நொந்தால் ஈந்தும் இழிவு,
ஈந்ததைக் கூறலில் ஈதலும் கழிவு.

கோலங்கள்தானே ஜாலங்கள் காட்டும்,
ஓலங்கள்தானே அவலங்கள் கூட்டும். Continue reading

Non Muslims about Islam

Joe Leigh Simpson , Professor of Obstetrics and  Gynecology at the North Western University in Chicago in the United States of America.

Professor Simpson said:

It follows, I think, that not only is there no conflict between genetics and religion, but in fact religion can guide science by adding revelation to some traditional scientific approaches. That there exists statements in the Qur’aan shown by science to be valid, which supports knowledge in the Qur’aan having been derived from Allah.  Continue reading

தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை!

தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; வடமாகாண கல்வி அமைச்சு

Commented on  தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; வடமாகாண கல்வி அமைச்சு
Voice of Mannar –  http://tinyurl.com/omd9eqo
இதனைத் தடுத்து நிறுத்துவதாயின், பல் வேறு நடிவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும்.  அதிற் பிரதானமானதாக் கொள்ளக் கூடியது,
பாடசாலை அபிவிருத்திச் சபை ( SCHOOL DEVELOPMENT SOCIETY) யின்
நிதிக்கட்டுப்பாடு.

வருட ஆரம்பத்திலும், மாணவர் அனுமதி நடை பெறும் காலங்களிலும் வந்து குவியும் பணம், எப்படி வந்தது என்பதைக் கண்டறியவே தேவையில்லை.

அடுத்தது, பெற்றாரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. எப்படியாவது நல்ல பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்ற உந்துதலில், அவர்களே களவாக இலஞ்சம் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.

தடுப்பதாயின், மிக இலகுவாகச் செய்ய வேண்டியவை. Continue reading

குர் ஆன் வழியில் … அல்லாஹ் நமது தீமைகளை அகற்றுவானா?

குர் ஆன் வழியில் …

அல்லாஹ் நமது தீமைகளை அகற்றுவானா?

இந்த வினாவுக்கு நேரடியான பதிலைத் தரும் புனித குர்ஆன் வசனமொன்றை உங்கள் முன் சமர்ப்பித்து கட்டுரையைத் தொடர்வோம். அல் குர்ஆன் சூரா முஹம்மது 47 வசனம் 2. ‘ இன்னும் ஈமான்கொண்டு, நற்செயல்களையும் ஆற்றி, முஹம்மது (ஸல்) மீது இறக்கி வைக்கப்பட்டதை, அது தங்கள் ரப்பிடமிருந்துள்ள உண்மையாய் இருக்கும் நிலையில் ஈமான் கொண்டார்களே அவர்களின் தீமைகளை, அவர்களைவிட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் அவன் சீராக்கிவிட்டான்.’ Continue reading

பாதகம் செய்யா பாகற்காயில் சாதகங்கள் !

பாகற்காய்:

அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, உடலுக்கு நன்று. இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும்.

பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். Continue reading