குர் ஆன் போதனைக்கு மாற்றமான எதுவும் ஏற்கப்படாது !
நாம் புனித குர்ஆன் கூறியவாறு ஆறு காரியங்களில் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆறு காரியங்களில் ஈமான் கொள்ள வேண்டியதை அறியவும், உறுதிப்படுத்திக் கொள்ளவும் புனித குர்ஆனே அத்தியாவசிய மாயுள்ளமை நிரூபணமாகிறது. அல்லாஹ் இஸ்லாத்தை நாயகத் திருமேனி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு அறிமுகப்படுத்திய போதுகூட ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமா தையிபாவைக் கூறும்படி பணிக்கவில்லை. மாறாக ஓதுவீராக எனக் கூறி அறிவை அறிய உதவும் குர்ஆனையே முன்னிலைப்படுத்தி உள்ளான். அத்தோடு வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா முதன் முதலில் குர்ஆனை இறக்கி, அதனைப் போதித்த பின்னரே, இஸ்லாமியர் என்ற வரைவுக்குள் மனிதரைக் கொணர்ந்தான். அத்தோடு அல்குர்ஆன் உரைகல் எனக் கூறி மகிமைப்படுத்தி, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியும் உள்ளான். Continue reading