உமக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றவற்றையே பின்பற்றுவீராக!
மேற்கண்ட கூற்று அல்லாஹ்வால் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்குக் கூறப்பட்டது. இக்கூற்று புனித குர்ஆன் 10: 109 இல் பதிவாகியுள்ளது. முஸ்லிம்கள் நபிகள் பெருமானாருக்குப் பின்னர் பின்பற்றலில் பல தடைகளை, தடுமாற்றங்களை, தப்பிதங்களை, திசை திருப்பங்களை சந்தித்துள்ளனர். கலீபாக்கள் காலம் ஓரளவு முஸ்லிம்களைக் குழப்ப நிலையில் தள்ளப் படாதவாறு காப்பாற்றி உள்ளது. அதன் பின்னர் இந்நிலையில் சரிவுகள், தளர்வுகள், சங்கடங்கள் ஏற்படத் தொடங்கி இருக்கின்றன. முஸ்லிம்களில் ஏற்பட்ட படிப்படியான இம்மாற்றங்கள் அவர்கள் பிழையான வழியைப் பின்பற்றிக் கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ள முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன Continue reading