Daily Archives: November 2, 2013

குர் ஆன் வழியில் … உமக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றவற்றையே பின்பற்றுவீராக!

உமக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றவற்றையே பின்பற்றுவீராக!

மேற்கண்ட கூற்று அல்லாஹ்வால் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்குக் கூறப்பட்டது. இக்கூற்று புனித குர்ஆன் 10: 109 இல் பதிவாகியுள்ளது. முஸ்லிம்கள் நபிகள் பெருமானாருக்குப் பின்னர் பின்பற்றலில் பல தடைகளை, தடுமாற்றங்களை, தப்பிதங்களை, திசை திருப்பங்களை சந்தித்துள்ளனர். கலீபாக்கள் காலம் ஓரளவு முஸ்லிம்களைக் குழப்ப நிலையில் தள்ளப் படாதவாறு காப்பாற்றி உள்ளது. அதன் பின்னர் இந்நிலையில் சரிவுகள், தளர்வுகள், சங்கடங்கள் ஏற்படத் தொடங்கி இருக்கின்றன. முஸ்லிம்களில் ஏற்பட்ட படிப்படியான இம்மாற்றங்கள் அவர்கள் பிழையான வழியைப் பின்பற்றிக் கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ள முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன Continue reading

சேதிகள் சொல்லும் தூதுவளை !

தூதுவேளை

1) வேறு பெயர்கள்: தூதுவளை, தூதுளம், தூதுளை

2) தாவரப் பெயர்கள்: Solanum Trilubatum; Solanaceae

3) வளரும் தன்மை: தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது. வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு. சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும், ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்கள் சுண்டைக் காய் மாதிரி இருக்கும். சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி. இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. Continue reading

Speaking on the character of Muhammad (pbuh)

Speaking on the character of Muhammad (pbuh), Mahatma Gandhi says in (Young India),

“I wanted to know the best of one who holds today’s undisputed sway over the hearts of millions of mankind….I became more than convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the Prophet, the scrupulous regard for his pledges, his intense devotion to this friends and followers, his intrepidity, his fearlessness, his absolute trust in God and in his own mission. These and not the sword carried everything before them and surmounted every obstacle. When I closed the 2nd volume (of the Prophet’s biography), I was sorry there was not more for me to read of the great life.”

குர்ஆன் வழியில் … இறைவனின் சிறு வேதனைகள் பெரிய வேதனைக்கு முன்வரும் எச்சரிக்கைகளே!

இறைவனின் சிறு வேதனைகள் பெரிய வேதனைக்கு முன்வரும் எச்சரிக்கைகளே!

அல் குர்ஆன் 32:21 – அவர்கள் மீண்டு விடுவதற்காக, பெரிய வேதனைக்கு முன் மிகத் தாழ்ந்த வேதனையை அவர்களை நாம் நிச்சயமாக சுவைக்கச் செய்வோம். இது இறைவனின் கருணையின் வெளிப்பாடு. ஓரே இறை கொள்கையை மக்களுக்கு நினைவு படுத்துவதற்காக நபிமார்களை, தூதுவர்களை, வேதங்களுடன் அனுப்பி அனைத்துலக மக்களையும் அவ்வப்போது அறிவுறுத்தி, அச்சமூட்டி, எச்சரித்தும் திருந்தாத நிலையிலும் அவன் தனது வேதனையை யார் மீதும் இறக்கி விடுவதில்லை. மாறாக, சிறு வேதனைகளைக் கொடுத்து மக்களை எச்சரித்து அவர்கள் தமது பிழைகளில் இருந்து மீள்வதற்கான சந்தர்ப்பத்தையும், அறிவுரையையும், எச்சரிக்கையாகப் பின்னும் விடுக்கிறான். Continue reading