Daily Archives: November 9, 2013

The Amazing Cucumber

This information was in The New York Times several weeks ago as part of their “Spotlight on the Home” series that highlighted creative and fanciful ways to solve common problems.

1. Cucumbers contain most of the vitamins you need every day, just one cucumber contains Vitamin B1, Vitamin B2, Vitamin B3, Vitamin B5, Vitamin B6, Folic Acid, Vitamin C, Calcium, Iron, Magnesium, Phosphorus, Potassium and Zinc. Continue reading

பொதுக் குறள்

சிகிச்சை அளித்தல் நன்றே அன்றேலது
சித்திரவதையாய் மாறாத போது

உன்னை உணர்வதே பேரின்பம் உணர்ந்தபின்
இரண்டறக் கலப்பதே உயர்வு

கூடலின் இன்பம் குறைவிலா துயரும்
ஊடிப்பின் கூடும் போது Continue reading

புதுக் கவிதை

இடமின்றி நாம் !

பட்டினத்தில் வீதிகளில் வாகன நெருக்கம்
பட்டப்பகலில் குட்டிக்கடைகள் பாதையோரம்
பெட்டைகளின் ஆக்கிரமிப்பு முன் நேரம்
வீட்டை இழந்தோர் குறட்டை பின் நேரம்
நட்ட நடுநிசிவரை நடைபாதைகளில்
சட்டம் போட்டு வாழ்வதால்
தடம் பதிக்க இடமின்றி நாம் ! Continue reading

பதிப்பில் வராத கிடப்புகள்! குட்டுப்பட்டுச் சாவீர் …

குட்டுப்பட்டுச் சாவீர் என்றும் நட்டநடு றோட்டில் தானே!

நாட்டைவிட்டு நம்மைத் துரத்திய
துயரக் கதையால் தொடர்ந்த இழப்பை
எட்டாண்டு சென்றும் தாக்கம் தீரா
விதியை நொந்து வெந்த வேளை
கெட்டவர் செய்கையை வெறுத்துச் சபித்து
அறம்போல் ஓர்வரி கவிதையி னிடையே
குட்டுப் பட்டுச் சாவீரொரு நாள்
நட்ட நடு றோட்டில்தா னென்றேன்! 1 Continue reading

Non – Muslims about Islam

“It is impossible for anyone who studies the life and character of the great Prophet of Arabia, who knows how he taught and how he lived, to feel anything but reverence for that mighty Prophet, one of the great messengers of the Supreme.  And although in what I put to you I shall say many things which may be familiar to many, yet I myself feel whenever I re-read them, a new way of admiration, a new sense of reverence for that mighty Arabian teacher.”  –Annie Besant, THE LIFE AND TEACHINGS OF MUHAMMAD, Madras, 1932, p. 4. 

Source: Islamic City

பொதுக் குறள் 2

உண்டாரின் தொல்லை உணர்ந்தார்க்கு இல்லை
உண்பதன் முறைமை தனை

கண்பார்வை யற்றோர் கையிலோர் தடியை
கண்ணாகக்  காப்பர் கண்டு

செல்போனி லின்று சேர்த்திடுக செய்தியை
சேர்த்திடுமே உரியார்க் குடன் Continue reading

குர்ஆன் வழியில்… நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!

மேற்கண்ட தலைப்புக்கு உரிமையாளன் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா. அவன் தனது புனித மாமறையில் காலம் என்ற பெயரிலான 103ஆவது அத்தியாயத்தில் 2ஆம் வசனமாக இதனைக் கூறியிருக்கிறான். முதலாவது வசனம் காலத்தின் மீது சத்தியமாக என சூழுரைப்பது. 3ஆம் வசனம், இரண்டாம் வசனத்துக்கு விதிவிலக்கு. அதாவது, ‘ஈமான் கொண்டு, நற்செயல் செய்து, உண்மையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கு ஒருவர் உபதேசித்தும் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர’ என்ற விதிவிலக்கைக் கூறுவது. 114 அத்தியாயங்களைக் கொண்ட புனி குர்ஆனில் மூன்றே வசனங்களையும், ஓரே விடயத்தையும் கூறிக் கொண்டிருக்கின்றது, காலம் என்ற சூரா. மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதைக் கூற அல்லாஹ் மூன்று சிறிய வசனங்களுடன், தனது சத்தியத்துடன் ஓர் அத்தியாயத்தை இறக்கி இருக்கிறான் என்பது, இறக்கிய அவ்விடயத்துக்கு எந்தளவு முக்கியத்துவத்தை அவன் அளித்திருக்கிறான் என்பதை விளக்குகின்றது. மனிதன் நஷ்டத்தில் இருப்பது அல்லாஹ்வுக்கு உகப்பான காரியமல்ல என்ற அவனது கருணையாலேயே அந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கின்றது. ஆதலால் அவனது விருப்பத்துக்கமைய நாம் நஷ்டமாகாத தொழிலைச் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவே இச்சிறு ஆக்கம் வெளியாகிறது. Continue reading