Daily Archives: November 23, 2013

கைமருந்தாகும் மூலிகைகள் !

கைமருந்தாகும் மூலிகைகள்

அந்தக் காலத்திலெல்லாம் இவ்வளவு பிணிகளும் இல்லை. மருத்துவ மனைகளும் இல்லை. மூலிகை, நாட்டு மருந்துகளின் மூலமாகவே மக்கள் நிவாரணம் பெற்றனர். பெரிய நோய்களைத் தவிர அன்றாடம் வாழ்வில் சாதாரணமாக ஏற்படும் உடற் சீர்கேடுகளை வீட்டில் செய்யப்படும் கை வைத்தியத்தின் வாயிலாக போக்கிக் கொண்டனர். எல்லாமே இயற்கையாக இருந்ததால் நோய்களும் குறைவாகவே வந்தன. நாமோ அவற்றின் மகிமைகளை மறந்து விட்டோம். இத்தகைய சூழலில் மக்கள் நல்வாழ்க்கையை பெற மூலிகைகளே துணை என்னும் நோக்கில் சில மூலிகைகளையும் அதன் பயன்களையும் இங்கு காண்போம். Continue reading

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளும் கடமைகளும் ஓர் போஸ்ட்மோட்டம் ( post-mortem)

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளும் கடமைகளும்
ஓர் போஸ்ட்மோட்டம் ( post-mortem)

இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படும் சிந்தனையில் மாற்றம் தேவை. நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே! இந்நாட்டின் பெரும்பான்மையினருக்குள்ள அதேயளவு உரிமைகள் நமக்கும் உண்டு. இன்னும் சொல்லப் போனால், மற்றைய இனங்களை விட நாம் இந்நாட்டுக்கு விஸ்வாசமாக நடந்துள்ளோம்.

சிங்களவரும், தமிழரும் கூட இந்நாட்டில் புரட்சி, உரிமை என்ற பெயர்களில் இரத்த ஆறை ஓட வி்ட்டுள்ளனர். ஆனால் நாம் என்றும் இந்நாட்டின் அரசியல் யாப்புக்கெதிராக கிளர்ந்தெழுந்ததில்லை. நமக்குப் பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் பேச்சு வார்த்தை மூலமும், நீதிமன்றின் மூலமும் அவற்றைத் தீர்த்துக் கொண்டு சிங்கள, தமிழ் மக்களோடு சகஜீவன வாழ்வை மேற்கொண்டு வந்துள்ளோம்.  Continue reading

குர் ஆன் வழியில் … மன்னிப்பைக் கைக்கொள்வீராக – நன்மையை ஏவுவீராக !

குர் ஆன் வழியில் …

மன்னிப்பைக் கைக்கொள்வீராக – நன்மையை ஏவுவீராக!

இத்தலைப்பு ஓர் குர்ஆனிய வசனமே! யாராவது நமக்கு ஏதாவது தீமை, அநியாயம் செய்து விட்டால், அதற்கு வரம்பு மீறாது பதிலடி கொடுக்க அனுமதித்த இடத்திலேயே மன்னிப்பைப் பற்றியும் சிலாகித்துக் கூறியுள்ளான். மேலும், குற்றப்பரிகாரப் பணம் பெறும்படி கூறி விட்டு அதனைத் தர்மமாக்கிடுமாறும் கூறியுள்ளான். அதற்கும் மேல் ஒருபடி சென்று அப்படி மன்னித்துவிடுவோருக்கான கூலி தன்னிடம் உள்ளதாக உத்தரவாதம் தந்துள்ளான். இவையெல்லாம் கூறிய கருணைக் கடலான வல்ல நாயன் அல்லாஹ், மேற்கண்ட வசனத்தில் மன்னிப்பை கைக் கொள்வீராக என்பதுடன் தொடராக நன்மையை ஏவுவீராக எனப் பணித்துள்ளான். Continue reading

குர்ஆன் குறள் – கடன்

குர்ஆன் குறள் – கடன்

கொடுத்தவ ரெடுப்பதும் எடுத்தவர் கொடுப்பதும்
கொடுகடன் முறையின் கடமையதாகும்

எடுத்தவர் கொடுத்திலரென் றெரிந்திட வேண்டா
கொடுத்திட முடியாத போது

கொடுத்தலும் நன்றே எடுத்தலும் நன்றே
கொடுத்திடாது தீமை யெனின்

கொடுத்தலை எடுத்தலை அடுத்தவ ரொருவர்
வடித்திடுக எழுத்தத னில் Continue reading

Some verses from The Holy Quran on the Existence of the Almighty Allah (GOD)

                                            Some verses from The Holy Quran                                                    on the Existence of the Almighty Allah (GOD)

Holy Quran says in 007.199 Hold to forgiveness; command what is right; But turn away from the ignorant.

in  002.067 And remember Moses said to his people: “God commands that ye sacrifice a heifer.” They said: “Makest thou a laughing-stock of us?” He said: “God save me from being an ignorant (fool)!”

042.011…. there is nothing whatever like unto Him, and He is the One that hears and sees (all things).

007.007 And verily, We shall recount their whole story with knowledge, for  We were never absent Continue reading