Daily Archives: November 28, 2013

அறவழி நடந்திட அறிவுரை சில…

வேணில் காலம் வீணில் அலையாதே,
கானில் கூளம் வீணில் போடாதே!

தேனுள் அமிழ்ந்தால் ஊனும் சிறக்கும்,
தீனுள் நுழைந்தால் ஞானம் பிறக்கும்!

வானுள் நுழைந்தால் வையம் தெரியும்,
வானுள் வலம்வர வசதியும் வேண்டும்! Continue reading

செல் குறள் செல் குரல் !

செலவின்றிச் செய்தி செக்கன்களில் செகமெங்குஞ்
செல்வதே செல் விந்தை

நேரமும் மீந்தன தூரமும் தொலைந்தன
கரத்தமை செல் போனால்

சுருங்கிய துலகமென்பர் முருகன் வாயினுள்
சுருக்கினர் இன்றோ செல்லுள் Continue reading

கற்ப மூலிகை ஆடாதோடை!

கற்ப மூலிகை ஆடாதோடை /ஆடாதோடா/ Adhatoda zeylanica.!

மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப்பட்டவைதான் காய கற்ப மூலிகைகள். Continue reading