Monthly Archives: November 2013

செல் குறள் செல் குரல் !

செலவின்றிச் செய்தி செக்கன்களில் செகமெங்குஞ்
செல்வதே செல் விந்தை

நேரமும் மீந்தன தூரமும் தொலைந்தன
கரத்தமை செல் போனால்

சுருங்கிய துலகமென்பர் முருகன் வாயினுள்
சுருக்கினர் இன்றோ செல்லுள் Continue reading

கற்ப மூலிகை ஆடாதோடை!

கற்ப மூலிகை ஆடாதோடை /ஆடாதோடா/ Adhatoda zeylanica.!

மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப்பட்டவைதான் காய கற்ப மூலிகைகள். Continue reading

குர்ஆன் வழியில்… திருந்தாமல் திருந்தும்படி கூறலாமா?

குர்ஆன் வழியில்…

திருந்தாமல் திருந்தும்படி கூறலாமா?

புனித குர்ஆனின் 61:2,3 ஆம் வசனங்களிலேயே எனது கட்டுரையைத் தொடர்கிறேன்.
61:2. முஃமின்களே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்?
61:3. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது, அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப் பெரியதாகும்! Continue reading

குர்ஆன் குறள் – தக்வா அல்லது இறையச்சம்

 

பயபக்தி யுடையோர்க்கு பயன்மிகு வழிகாட்டும்
பயகம்பர் வேதம் 2-2

பயந்திடுவீர் அல்லாஹ்வை மறுமையின் சந்திப்பை
உயர்ந்திடுவீர் 2-203ல் கண்டு

அஞ்சிடுக றப்பை அறிந்திடுக படைப்புதனை
எஞ்சியுள்ளது 4-1ல் காண் Continue reading

அறவழி நடந்திட அறிவுரை சில

வாயைப் போற்றி நோயைத் தவிர்,
வேரை அறுத்து வியாதியை அழி.

தாயைப் பேணும் பண்பினை வளர்,
ஊரையும் பேரையும் உயர்த்திடேல் துயர்.

வாரை இழந்தால் செருப்பும் இழியும்,
வேரை அழித்தால் மரமும் அழியும். Continue reading

முஃமின்களாக இருக்கும் நிலையில் நற்செயல்கள் செய்வோர் சொர்க்கம் செல்வர்!

குர்ஆன் வழியில் …

முஃமின்களாக இருக்கும் நிலையில் நற்செயல்கள் செய்வோர் சொர்க்கம் செல்வர்!

(A VVIP Visa to Heaven – Allah’s Promise)

வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா தன்னருள் மறையில் ஆங்காங்கே நற்செயல் செய்யும்படியும், நற்செயல் செய்பவர்களுக்குரிய கூலி பற்றியும், அவர்களின் பண்புகள் பற்றியும் கூறிச் சென்றுள்ளான். இது மனித வர்க்கத்தின் மேல் அவன் கொண்டுள்ள கருணை, கரிசனை, காருண்யம்,  அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டும், உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் அமைதி நிலவ வேண்டும் போன்ற இன்னோரன்னவற்றை அடிப்படையாகக் கொண்டதே! Continue reading

வாசி, புரிதலுக்காக…

வாசி, புரிதலுக்காக…

சுவாசி   –        உய்வடைவதற்காக

உண்ணு  –      வாழ்வதற்காக

உடுத்து  –       மானம் மறைப்பதற்காக

உறங்கு  –       ஓய்வுக்காக

படி        –        நடப்பதற்காக Continue reading

வல்ல அல்லாஹ்வின் அருட்கொடை காற்று

வல்ல அல்லாஹ்வின் அருட்கொடை காற்று

காற்று, நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்தும் அவசியம் என்றாலும், காற்றின் முதன்மை கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. காற்று இன்றேல் நாமனைவரும் சில நிமிடங்களிலேயே இறந்து விடுவோமென்பது அனைவருமறிந்த ஓர் உண்மை. மேலும் காற்றின் பிற நன்மைகளை அநுபவித்துவரும் நம்மில் எத்தனைபேர் அது பற்றித் தெரிந்துவைத்து இருக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லையென்றே பதில் கூறலாம். Continue reading