Monthly Archives: August 2014

குறள் – வாய்

குறள் – வாய்

1. வாய்கட்டி வாழார் வாழ்வு பின்னாளில்
வாய்விட்டு அழவே வைக்கும்!

2. வாய்பேணி உண்ணார் நலம் எந்நாளும்
வாய்வையே விலையாயத் தரும்!

3. வாயாலே வம்புகள் வளருவதால் தீய
வார்த்தைதனை நீயும் வெறு! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 40:75

அல்லாஹ்வால் வழி கெடுக்கப்பட்டதன் காரணம்:

அது, நீங்கள் நியாயமின்றி மகிழ்ச்சி அடைந்தவர்களாகவும், இறுமாப்புக் கொண்டவர்களாகவும் இருந்ததன் காரணத்தினால்தான்.

மேலதிக விளக்கம் பெற 74ஐயும் 76ஐயும் வாசிக்க!

– நிஹா –

 

Al Quran 40:75

 

“ That was because ye were wont to rejoice on the Earth in things other than the Truth, and that ye were wont to be insolent. ‘’

– niha -

அறிந்திட சில…

அறிந்திட சில ….

தோற்றம் என்பது மாற்றம் ஆகும்
மாற்றம் என்பதே மாறா விதியாம்!

படிப்பின் பெருமை பட்டங்களி லில்லை
படிப்பின் அருமை படைப்பை அறிதலில்!

படைப்பினை அறிந்து படைத்தவனை உணர்
படையினை நகர்த்த வழிமுறை தேவை! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 6:114

அல்லாஹ் அல்லாதவனையா தீர்ப்பளிப்பவனாக நான் தேடுவேன்? வன்தான் உங்களின்பால் இவ்வேதத்தை விவரிக்கப்பட்டதாக இறக்கி வைத்தான். எவர்களுக்கு நாம் வழங்கினோமோ அவர்கள், ‘நிச்சயமாக இது உம்முடைய ரப்பிடமிருந்து உண்மையைக் கொண்டு இறக்கப்பட்டது’ என்பதை அறிவார்கள். எனவே சந்தேகிப்பவர்களில் உள்ளவராக நிச்சயமாக நீர் ஆகிவிடாதீர்.

 

- நிஹா –

Al Quran 6:114

Say, “ Shall I seek for judge other than Allah? When He it is who hath sent unto you the Book, explained in detail. They know full well, to whom We have given the Book, that it hath been sent down from thy Lord in truth. Never be then of those who doubt.

- niha –

அல் குர்ஆன் வசனம் 2:102 உண்மை நிலையைக் கண்டறிதல்…

அல் குர்ஆன் வசனம் 2:102
உண்மை நிலையைக் கண்டறிதல்…

மேலும், சுலைமானுடைய ஆட்சிக் காலத்தில் ஷைத்தான்கள் ஓதிய ஒன்றையே பின்பற்றினார்கள். மேலும், சுலைமான் நிராகரித்துக் கொண்டிருக்கவில்லை. எனினும், ஷைத்தான்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனர். மேலும், மக்களுக்குச் சூனியம் என்னும் கலையையும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்னும் இரு வானவர்கள் மீது இறக்கப்பட்டிருந்ததையும், கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘தவிர, நாம் ஒரு சோதனையேதாம்’ ஆகவே, நிராகரிப்பவனாக ஆகிவிடாதே என்று, அவ்விருவரும் சொல்லும் வரை எவருக்கும் அவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை. பின்னரும், அவர்கள் கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவை உண்டு பண்ணக் கூடியதை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொண்டனர். மேலும், அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாது அதைக் கொண்டு எவருக்கும் அவர்கள் இடர் ஏற்படுத்துபவர் அல்லர். இன்னும், அவர்கள் தங்களுக்குப் பயனளிக்காததும், இடர் அளிக்கக் கூடியதுமான ஒன்றைக் கற்றுக் கொள்கின்றனர். ‘எவரொருவர் இதை விலைக்கு வாங்குவாரோ அவருக்கு மறுமையில் எத்தகைய நற்பேறும் இல்லை’ என்பதை உறுதியாக அறிந்தே இருந்தனர். மேலும், எதற்காகத் தங்கள் ஆத்மாவை விற்று விட்டார்களோ, அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 6:50

நீர் கூறுவீராக! அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. இன்னும் மறைவானவற்றை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்று உங்களிடம் கூறவில்லை. எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப்பட்டவைகளையன்றி நான் பின்பற்றுவதில்லை. குருடனும் பார்வையுடையவனும் சமமாவார்களா! என நீர் கேட்பீராக! எனவே, நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

– நிஹா –

Continue reading

மலக்குகள் என்றால் ஷைத்தான்கள் என்கின்றார் பீஜே !

மலக்குகள் என்றால் ஷைத்தான்கள் என்கின்றார் பீஜே !

அல் குஆன் சூரத்துல் பகறா வசனம் 102 இல் ஹாரூத், மாரூத் ‌என்ற இருவரும் மலக்கயீன், அதாவது மலக்குகள் அல்லது வானவர்கள் என்றே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஆனால் பீ ஜைனுல் ஆபிதீன் என்பவர் மட்டும், ஹாரூத், மாரூத் ‌என்ற இருவரும் ஷைத்தான்கள் என்கின்றார். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! அல்லாஹ்வுடைய வசனத்தில் அனைவரும் அறிந்த சொல்லான மலக்கு என்பதில் தன் கைவண்ணத்தைக் காட்டுகின்றார். Continue reading

Quran Kural

குர்ஆன் குறள் !

தடுப்பவரார் தூயவுணவு அலங்காரம் அடியாருக்கு
கொடுத்திருக்க 7:32இல் நாம்!

ரப்பு தடுத்ததை அறிந்திடுக அஃராப்ஏழில்
தப்பை விடுத்திடுவீர் வாழ்வில்! 7:33

ஊசியின் ஓட்டையுள் ஒட்டகம் போகும்வரை
போகாரே சுவனம் பொய்யர்! 7:40 Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 3:61

ஞானம் உம்மிடம் வந்த பின்னர், அதில் எவரேனும் உம்முடன் தர்க்கம் செய்வாராயின், நீர் கூறுவீராக! வாருங்கள் எங்களது ஆண் மக்களையும், உங்களது ஆண் மக்களையும், எங்களது பெண்களையும், உங்களது பெண்களையும், எங்களையும், உங்களையும் நாம் அழைத்துக் கொண்டு பின்னர் நாம் இறைஞ்சுவோம். ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’

– நிஹா –

Continue reading