அறிந்திட சில …..
பாரை தகர்த்திடும் புகுந்தே வேர்!
போரை அழித்திடும் வலிந்தே போர்!
போனால் வராது மானம்
போனாலும் வருமே இணையம்!
பேனா தருவது இன்பம்
பேனால் வருவது துன்பம்!
தானாய் விரிந்தால் மலர்
வீணாய்ப் போமே விரித்தால்!
வெட்டத் தளிரும் சேட்டமாய் மரம்
விட்டால் தொலையும் வேகமாய் பட்டம்!
பானை வனைந்திட களிமண் தேவை
வீணை வடித்திட பெருமரம் தேவை!