Daily Archives: January 21, 2014

உலகில் முகத்திரையால் இன்று இஸ்லாத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் களைவோம்!

முஸ்லிம் பெண்களின் முகத்திரை குர்ஆனியக் கோட்பாடல்ல!

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம். அது இயற்கையோடு ஒட்டி வாழக் கூடியவற்றையே அனைத்து விடயங்களிலும் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தோடு இம்மார்க்கம், எந்த இடத்திலும் நிர்ப்பந்தத்தை வலியுறுத்தவில்லை. விலக்கப்பட்ட (ஹறாம்) உணவில்கூட விட்டுக் கொடுப்பைச் செய்திருக்கின்றது. காரணம் மனிதர் நிர்ப்பந்தம் காரணமாக தங்கள் வாழ்க்கையைக் கஷ்டத்துக்குள் ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதே! Continue reading

கப்ர் பிரார்த்தனை ஏற்கப்பட்டதே !

குர்ஆன் வழியில்…

கப்ர் பிரார்த்தனை ஏற்கப்பட்டதே !

இஸ்லாமியர் இறந்து அடக்கப்பட்டால், அவ்வடக்கப்படும் தலத்தைக் கப்ர் என்கின்றோம். நாம் அடக்கப்பட்டு, அடக்க வந்தோர் சில அடிகள் எடுத்து வைத்து நடந்து கொண்டிருக்கும் போதே கப்ரில், முன்கர் நக்கீர் என்ற மலக்குகள் நம்மிடம் கேள்வியைத் தொடங்கி விடுமாம். அதனால், கப்ரில் நடைபெறவுள்ள, அல்லது நடந்து கொண்டிருக்கும் வேதனைகளைக் குறைப்பதற்காக அடக்கப்பட்ட முஸ்லிமின் வேதனையைக் குறைக்கும் நோக்குடன் துவா என்ற பிரார்த்தனையை வல்ல நாயன் அல்லாஹ்விடம் கேட்பது நமது மத்தியில் நடந்து வருவது யாவரும் அறிந்ததே!  இதனை நாயகமவர்கள் தனது வாழ்விலும் கடைப்பிடித்து வந்துள்ளமை பற்றி ஹதீஸ் பதிவுகள் நிறையவே இருந்தாலும், குர்ஆனில் அது சார்ந்த வசனமொன்று காணப்படுவது அதன் சிறப்பை, தாற்பரியத்தை, அங்கீகாரத்தை உத்தியோக பூர்வமாக நிறுவ உதவும். Continue reading