Monthly Archives: January 2014

நற்சிந்தனை!

மார்க்கம் பின்பற்றுவதற்கே அன்றி வேறல்ல. மார்க்கத்தை யாரும் காப்பற்றவோ மார்க்கத்தைப் பரப்பவோ தேவையில்லை. அது அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளது. அவன் நாடியவர்களுக்கு வழிகாட்டுகின்றான். அவனே மார்க்கத்தைப் பினபற்றத் தகுந்தவன் யார் என்பதையும் அறிந்திருக்கின்றான்.  அல்லாஹ் விரும்பியிருந்தால் அனைவரையும் இஸ்லாமியராக ஆக்கியிருக்க முடியம் என்பதும் அவனது வாக்கே! 

மார்க்கத்தைப் பின்பற்றின் மார்க்கம் நமக்குப் பாதுகாப்பாக அமையும். மார்க்கத்தைப் பின்பற்றி முஃமின்களாக வாழ்ந்தால் அல்வாஹ்வே நமக்குப் பாதுகாவலனாக மாறிவிடுகிறான்.  மார்க்கத்தில் உள்ளவற்றை உள்ளவாறே வெளிப்படுத்துவது அறிந்த அனைவரதும் கடமையே தவிர. மார்க்கத்தைப் பரப்புவது அல்ல. இஸ்லாத்திற்கு எததனை பேர் வந்துள்ளார்கள் என்பதைவிட, இஸ்லாமியர் எத்தனை பேர் இஸ்லாமியராக வாழ்ந்து கொண்டிக்கின்றனர் என்பதே முக்கியம்!

நம் உயிரிலும் மேலாக நேசிக்கப்பட வேண்டிய அண்ணலார் அவர்களுக்கு எத்தனை பேர் முஸ்லிம்களாக இருந்திருக்கின்றனர் என்பதைப் பொறுத்தே கூலி வழங்கப்படவுள்ளதாக அல்லாஹ் தன்மாமறையில் கூறியுள்ளமை எண்ணிக்கை முஸ்லிம்கள் அல்லர், உண்மை முஸ்லிம்கள்!

மார்க்கத்தைப் பிரித்துக் கூறுபோட்டுக் கொண்டிருப்போர் அல்லாஹ்வால் வெறுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் நபிகளாருக்குமே எவ்வித சம்பந்தமும் கிடையாது என அல்லாஹ் கூறியமை அனைவதும் கவனத்திற்கு உரியது.

 

 – நிஹா – 

The world’s Highest Battlefield in India!

Siachen Glacier

Siachen Glacier

सियाचिन ग्लेशियर

SiachenGlacier satellite.jpg
Map showing the location of Siachen Glacierसियाचिन ग्लेशियर

Kashmir (Disputed between India and Pakistan; portion controlled by India shown above in yellow)[1][2][3]

Type Mountain glacier
Coordinates 35°25′16″N 77°06′34″E / 35.421226°N 77.10954°E
Length 70 km (43 mi)

The Siachen Glacier is located in the eastern Karakoram range in the Himalaya Mountains at about 35°25′16″N 77°06′34″E / 35.421226°N 77.109540°E, just north-east of the point NJ9842 where the Line of Control between India and Pakistan ends.[4] At 70 km (43 mi) long, it is the longest glacier in the Karakoram and second-longest in the world’s non-polar areas.[5] It falls from an altitude of 5,753 m (18,875 ft) above sea level at its head at Indira Col on the China border down to 3,620 m (11,875 ft) at its terminus. Continue reading

உலகில் முகத்திரையால் இன்று இஸ்லாத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் களைவோம்!

முஸ்லிம் பெண்களின் முகத்திரை குர்ஆனியக் கோட்பாடல்ல!

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம். அது இயற்கையோடு ஒட்டி வாழக் கூடியவற்றையே அனைத்து விடயங்களிலும் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தோடு இம்மார்க்கம், எந்த இடத்திலும் நிர்ப்பந்தத்தை வலியுறுத்தவில்லை. விலக்கப்பட்ட (ஹறாம்) உணவில்கூட விட்டுக் கொடுப்பைச் செய்திருக்கின்றது. காரணம் மனிதர் நிர்ப்பந்தம் காரணமாக தங்கள் வாழ்க்கையைக் கஷ்டத்துக்குள் ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதே! Continue reading

கப்ர் பிரார்த்தனை ஏற்கப்பட்டதே !

குர்ஆன் வழியில்…

கப்ர் பிரார்த்தனை ஏற்கப்பட்டதே !

இஸ்லாமியர் இறந்து அடக்கப்பட்டால், அவ்வடக்கப்படும் தலத்தைக் கப்ர் என்கின்றோம். நாம் அடக்கப்பட்டு, அடக்க வந்தோர் சில அடிகள் எடுத்து வைத்து நடந்து கொண்டிருக்கும் போதே கப்ரில், முன்கர் நக்கீர் என்ற மலக்குகள் நம்மிடம் கேள்வியைத் தொடங்கி விடுமாம். அதனால், கப்ரில் நடைபெறவுள்ள, அல்லது நடந்து கொண்டிருக்கும் வேதனைகளைக் குறைப்பதற்காக அடக்கப்பட்ட முஸ்லிமின் வேதனையைக் குறைக்கும் நோக்குடன் துவா என்ற பிரார்த்தனையை வல்ல நாயன் அல்லாஹ்விடம் கேட்பது நமது மத்தியில் நடந்து வருவது யாவரும் அறிந்ததே!  இதனை நாயகமவர்கள் தனது வாழ்விலும் கடைப்பிடித்து வந்துள்ளமை பற்றி ஹதீஸ் பதிவுகள் நிறையவே இருந்தாலும், குர்ஆனில் அது சார்ந்த வசனமொன்று காணப்படுவது அதன் சிறப்பை, தாற்பரியத்தை, அங்கீகாரத்தை உத்தியோக பூர்வமாக நிறுவ உதவும். Continue reading

அறிவுக் குறள் – வாய் !

அறிவுக் குறள்

வாய்

பேச்சு மூச்சால் வருதலால் வாய்ச்சொல்லை
கச்சிதமாய்க் காத்தல் நெறி!

கருத்தை விரிக்கும் சிரித்தும் சீர்படுத்தும்
வருத்திடாதே வாயைப் பேணின்!

பேசிடு தக்கதை பேசற்க மற்றதை
தோஷியாம் போக்கை மாற்று! Continue reading

அறிவோம் கறிவேப்பிலையின் பெறுமதியை!

கறிவேப்பிலை

சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசப்படும் கறிவேப்பிலையின் பயன்களோ அதிகம். ஆனால், அவற்றின் பெறுமதியைப் பயன்படுத்துவதில் நாம் தவறிவிட்டதாகவே மேற்கண்ட நடவடிக்கை விளக்குகின்றது. அவற்றின் பயன்பாடுகள் சிலவற்றைப் பார்ப்போம்! Continue reading

மருத்துவக் குறிப்பு – மலக்கிருமி ஒழிக்க …

மலக்கிருமி ஒழிக்க …

 

மலக்குடலின் அசுத்தம், வாயு காரணமாகவும், இனிப்பு அதிகமாகச் சாப்பிடுவதாலும் குடலில் பூச்சிகள் சேரும். அதைப் போக்க சுண்டக்காய் வற்றலைப் பொடி செய்து சாப்பாட்டில் முதல் சோற்றில் கலந்து சாப்பிடவும். Continue reading