Category Archives: General

நற்சிந்தனை 34 ! கலிமா கூறும் ஏகத்துவம் !

இப்பதிவு முநூலில் இருந்து பெறப்பட்டது. பீஜே அவர்களின் ஒன்லைன் கேள்வி – பதில் நிகழ்வில் அல்லாஹ் பற்றிய கேள்வி ஒன்றுக்கு, அல்லாஹ் ஔியாக இருப்பதால் இவ்வுலகில் காண முடியாது. மறுவுலகில், நமக்கு தரப்படும் வேறொரு அமைப்புள்ள கண்களினால் காணலாம் என பீஜே கூறிய கருத்துக்கு, மாற்றுக் கருத்தாகப் பதிவாகி இருந்த குர்ஆனிய உண்மைகளை, வாசகர் நலன் கருதி, இப்பகுதியில் பதிவிடுகிறேன்!

நற்சிந்தனை! 34

கலிமா கூறும் ஏகத்துவம் !

தௌஹீத் என்றால் என்ன என்ற விளங்கிக் கொள்ளாதவரை அல்லாஹ் பற்றிய குழப்பங்களுக்கு அளவே இருக்காது. அதனை விளங்க வைக்கவே வேதங்கள், நபிமார், ரசூல்மார் உலகுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கொணர்ந்த தாரக மந்திரம், லா இலாஹ இல்லல்லாஹ் அதாவது, அல்லாஹ்வைத் தவிர எதுவுமில்லை. நமது நாயகம் ஸல் அவர்களுக்கு அல்லாஹ், நீர் இபுறாஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக எனக் கூறிவிட்டு, இபுறாஹிம் இணைவைப்போராக இருக்கவில்லை என்கின்றான். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் -38:29

 

பாக்கியமிக்க வேதமாகும். இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதை உம்பால் நாம் இறக்கி வைத்தோம்!

 

- நிஹா -

Al Quran 38:29

 

A book which We have sent down unto thee, full of blessings, that they may meditate on in Signs, and that men of understanding may receive admonition.

 

- niha -

தேர்தல் சட்டங்களில் மாற்றம் வேண்டும்!

தேர்தல் சட்டங்களில் மாற்றம் வேண்டும்!

வோட்டைப் போட்‌ட பின்னர் பிச்சைப் பாத்திரம் ஏந்தும்
கேட்டை நீக்கும் சட்டங்கள் வேண்டும்!

வோட்டுப் போட்டு பிரதிநிதிகளாக்கும் வாக்காளருக்கு
வோட்டுப் போட்டவர்களை மீளப் பெறும் சுதந்திரம் வேண்டும்!

நோட்டுக் கற்றைகளால் ‌வோட்டைக் காவு கொள்ளும் கயவர்
கோர்ட் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்!

கள்ள வோட்டுப் போடும் குள்ளநரிக் கூட்டத்தின்
தொல்லை அகலும் கடும் சட்டம் வேண்டும்!

எப்படியும் வெல்வேன் என்று செப்படி வித்தை செய்யும்
குப்பைகள்அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும்!

தேர்தல் சட்ட்ங்கள் மீற இடமளிக்கும்
தேர்தல் ஆணையாளரும் தண்டிக்கப்படல் வேண்டும்.!

கள்ளவோட்டு அடிக்கும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டால்
கொள்ளையர் பட்டமளித்து வாக்குரிமையை பறிக்க வேண்டும்!

அதிகாரத்திலிருக்கும் வரை வேட்புமனு கொடுக்கும்
சதிகாரர் அதிகாரம் நீக்கப்படல் வேண்டும்!

வதியாதார் வோட்டு இனங்காணப்பட்டு நீக்கும்
விதியொன்று செயற்படுத்தப்படல் வேண்டும் ! 

தேர்கால வன்முறைகளை அடக்க சார்க் பொலிஸாரால்
தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படல் வேண்டும்!

 

- நிஹா -

வாக்கு பற்றி ஒரு நோக்கு!

வாக்கு பற்றி ஒரு நோக்கு!

 

 

வோட்டைப் போட்டு கேட்டை வாங்காதீர்கள்!
‌வோட்டைப் பாவித்து கேட்டை விலக்குங்கள்!

ஒருநாள் இன்பத்துக்காக வோட்டை அளித்தால்
வாழ்நாள் முழுதும் துன்பம் விளைக்கும்!

அறிந்து அளியுங்கள் உங்கள் வாக்கை அன்றேல்
அழிவை விலைக்கு வாங்கி விடுவீர்கள்!

அற்ப எண்ணங்களுக்காகப் போடப்படும் வாக்கு
சொற்ப உரிமையையும் அழித்துவிடும்!

விற்றுப் பிழைக்க எண்ணாதீர் வாக்கை
தோற்றுவிடுவீர்கள் உங்கள் பிறப்புரிமையை!

வோட்டுக்கள் நோட்டுக்களுக்கு விற்கப்பட்டால்
வேட்டுக்களால் பதில் தீர்க்கப்படும்!

- நிஹா -

Quran Kural ! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள் !

 
அல்ஹம்து லில்லாஹிரப்பில் ஆலமீன் 10:10இல்
அழகான முடிவதான பிரார்த்தனையாமே!

தட்டழிந்திடவே விட்டு வைத்தான் வழிகேட்டிலே
சந்திப்பை நம்பார் தமை! 10:11

அழைத்திடுவான் துன்பம்பரின் அனைத்து நிலையில்
அழையாவா றகல்வா னகன்றிடில் 10:12

அல்லாஹ்வி னோர்நாள் நம்மாயிரம் வருடமென
அல்ஹாஜ் 47இல் அழகாக நவின்றானே!

வானவரேறிடும் அந்நாள் ஐம்பதாயிரம் வருடமென
ஞானவான் நல்கினான் 70:4இல்

நெருங்காதீர் விபச்சாரம் மிகக்கெட்டது மானக்கேடை
வருவிக்கும் என்குது 17:32

என்னைநினைவு கூர்ந்திடத் தொழுகையை நிலைநிறுத்துக
மனிதனைப் பணிக்கின்றான் 20:14இல்

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZ

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 4:142

நிச்சயமாக நயவஞ்சகர்கள் ‌அல்லாஹ்வை வஞ்சிக்கின்றனர். ஆனால், அவனோ அவர்களை வஞ்சிப்பவனாக இருக்கின்றான். மேலும், தொழுகைக்கு அவர்கள் நின்றார்களாயின் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே நிற்கின்றனர். இன்னும் அவர்கள் மிகக் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.

- நிஹா -

Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 29:69

 
மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக நம்முடைய நேரான வழியில் செலுத்துகின்றோம். நன்மை செய்வோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கின்றான்.

 

- நிஹா -

 

Al Quran  29:69

 

And those who strive in Our – We will certainly guide them to Our Paths: For verily Allah is with those who do right. 

 

- niha -

நாம் செல்ல வேண்டிய வழியை உறுதி செய்து கொள்வது எப்படி!

நாம் செல்ல வேண்டிய வழியை உறுதி செய்து கொள்வது எப்படி!

நாம் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தால், அதற்கான ஆயத்தங்களைச் செய்வதோடு போகவுள்ள பாதை பற்றிய அறிவு வேண்டப்படுகின்றது. காரணம், பாதையே நாம் செல்ல வேண்டிய இலக்கை அடைவதற்கு உறுதுணையாயிருப்பது. ஒரு இலக்கை அடைவதற்குப் பல பாதைகள்கூட இருக்கலாம். அத்தனை பாதையிருந்தும் சில வேளை புதிய பாதை ஒன்றைப் போட்டுச் செல்ல வேண்டிய நிலைமைகூட காணப்படலாம். குறுக்கு வழிப் பாதைகள், ஒற்றையடிப் பாதைகள் எனப் பல்வேறு வகைத்தானவையும் உண்டே! இவை பாவிப்பவர்களின் திறன், அறிவு, அனுபவம், தேவை, வசதி என்பவற்றை உள்ளடக்கி அவரவர்களின் தெரிவுக்கு உள்ளாகும்.

Continue reading

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதீனம்…. ஒரு பார்வை!

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதீனம்…. ஒரு பார்வை!

நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் எனப் பயபக்தியோடு சத்தியஞ் செய்து பாராளுமன்ற அங்கத்தவர்களாகப் பதவி வகிப்போர் அவர்கள் சத்தியம் செய்து எடுத்த உறுதிமொழியைப் பாதுகாக்கத் தவறியுள்ளதன் மூலம், பாராளுமன்றின் சிறப்புரிமைகளை மீறியுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்றி மக்கள் அவர்களிடம் அளித்திருந்த நம்பிக்கைப் பொறுப்பை மீறியுள்ளனரா! அல்லது இரண்டுமா!

யாப்பின் Xஆவது உறுப்புரையின் 63ஆவது பந்தியில் கூறப்பட்ட சத்தியத்தைச் செய்து அதனைச் செயற்படுத்தத் தவறியமை, பாராளுமன்ற அங்கத்தவரது தலையாய கடமையைச் செய்யாமல் புறக்கணித்ததாக அமையுமானால், அந்த அங்கத்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? அவர்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்தமையாகக் கொள்ள முடியுமா? என்பதும் ஓர் முக்கிய விடயமாகக் கருதப்பட வேண்டியதே! சத்தியம் செய்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்தாதவர்கள் பற்றிய நடைமுறைச் சட்டமென்ன? Continue reading