ஹைகூவில் கவிதைகள் சில!
அநர்த்தங்களில் பணம் சுருட்டி
ஆளாய்ப் போனவர்கள்
பாழாய்ப் போவதென்னாளோ?
போரால் விளைந்த அனர்த்தத்தைவிட,
அதைச் சீராட்டியவர்களால்
விளைந்தது அதிகம்!
எரிந்த வீட்டில் பிடுங்கும்
ஏகபோகங்கள்
தீயணைப்பும்,துயரணைப்பும் செய்பவையே!
பார்த்துப் பார்த்துச்
செய்து வைத்த திருமணங்கள்
பாதிக்கு முன்னே சேதியாவதேனோ?
சேர்ந்து வாழ்ந்த காதலரும்
பிரிய நேர்ந்த காரணம்
புரிந்திடாதது ஏனோ?