உண்மை ஊமையல்ல!

 

உணவும் மரணமும் இறைவன் கையில்

பணமும் சினமும் மனிதன் கைகளில்

இனமும் சனமும் இழந்து நிற்கின்றனர்

மனமும் குணமும் கெட்டதனால் !

தானமும் தவமும் இழந்ததனால்

தோணுவதெல்லாம் செய்கின்றனர்

பேணவும் நாணவும் தெரிந்திடாத

கோமணங்களாகி நிற்கின்றனரே!

மானமும் ஞானமும் எங்கோ போனதே!

வேணவாக் கொண்டே மதிகெட்டு

வீணாணவற்றை செய்கின்றனரே!

கோணல் பாதையை தேர்ந்ததனால்

தானாய் அழிவில் அமிழ்ந்தனரே!

காணவும் சகியா கோணங்கிகள்

தோணவும் வேண்டா கனவினிலும்!

பேணா உயிர்கள் நாணி விடும்

கூனிக் குறுகி குற்றுயிராகி விடும்!

 

 – நிஹா -