Category Archives: Religious

நாம் செல்ல வேண்டிய வழியை உறுதி செய்து கொள்வது எப்படி!

நாம் செல்ல வேண்டிய வழியை உறுதி செய்து கொள்வது எப்படி!

நாம் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தால், அதற்கான ஆயத்தங்களைச் செய்வதோடு போகவுள்ள பாதை பற்றிய அறிவு வேண்டப்படுகின்றது. காரணம், பாதையே நாம் செல்ல வேண்டிய இலக்கை அடைவதற்கு உறுதுணையாயிருப்பது. ஒரு இலக்கை அடைவதற்குப் பல பாதைகள்கூட இருக்கலாம். அத்தனை பாதையிருந்தும் சில வேளை புதிய பாதை ஒன்றைப் போட்டுச் செல்ல வேண்டிய நிலைமைகூட காணப்படலாம். குறுக்கு வழிப் பாதைகள், ஒற்றையடிப் பாதைகள் எனப் பல்வேறு வகைத்தானவையும் உண்டே! இவை பாவிப்பவர்களின் திறன், அறிவு, அனுபவம், தேவை, வசதி என்பவற்றை உள்ளடக்கி அவரவர்களின் தெரிவுக்கு உள்ளாகும்.

Continue reading

நற்சிந்தனை 32 அல்லாஹ்வை மறவாது அவனும் நம்மை மறக்காதிருக்க வழி தேடுவோம்!

நற்சிந்தனை 32

அல்லாஹ்வை மறவாது அவனும் நம்மை மறக்காதிருக்க வழி தேடுவோம்!

 
அல் குர்ஆன் 59:19 அல்லாஹ்வை மறந்து விட்டவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், அவன், அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்துவிட்டான்!

மேற்கண்ட வசனத்தில் முன்னைய கூட்டம் ஒன்று அவனை மறந்தது பற்றியும், அதனால் அல்லாஹ், அவர்களைத் தங்களையே மறக்கும்படி செய்து விட்டான் என்ற ஒரு உண்மையை வெளிப்படுத்தி நம்மையும் அப்படி ஆகிவிட வேண்டாம் என எச்சரிக்கின்றது.

இச்சம்பவத்தில் இறுதி இழப்பு அல்லது தண்டனை அல்லது விளைவு நம்மை அவன் மறந்து விடுவதுடன், நம்மை நாம் மறந்து விடவும் செய்வதிலுள்ள பாரதூரம் விளங்க வேண்டியது. எதற்காக நாம் நம்மை மறக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளோம் என்பதை ஒப்புநோக்கின்அல்லாஹ்வை மறந்ததற்காகக் கொடுக்கப்பட்டதனைக் காண்கின்றோம். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 59:19
அல்லாஹ்வை மறந்து விட்டவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், அவன், அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்துவிட்டான்!

- ‌ நிஹா -

AlQuran 59:19

 

And be ye not like those who forgot Allah: and He made them forget themselves! Such are the rebellious transgressors!

 

- niha -

QURAN KURAL !

குர்ஆன் குறள்!

 
 

ஞானம் நிறைந்தது அலிப்லாம் றாவென
கானம் பாடுவது 10:1

 

கூறுவீர் நற்செய்தி ரப்பிடத்தில் உயர்பதவி
நேருமே நம்பிக்கையாள ருக்கு 10:2

 

படைத்தபின் நிவையானான் அர்ஷின் மீதவனே
பாலிக்கின்றான் தனித்துத் தானே! 10:3

 

ஆரம்பப் படைப்பனைத்து மவன் செயலே
அறிந்திட 10:4 பார்!

 

ஈமானும் நற்செயலும் நேர்வழி பெறும்
இன்பமான சுவனச்‌‌சோலை வரும் 10:9

 

– நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 19:59

இவர்களுக்குப் பின்னர், தீய கூட்டத்தினர் பிரதிநிதியாக வந்தனர். தொழுகையை அவர்கள் வீணாக்கினார்கள். மனோஇச்சையையும் பின்பற்றினார்கள். ஆகையால், பெரும் கேட்டை அவர்கள் சந்திப்பார்கள்.

 

- நிஹா -

 

Al Quran 19:59

 

But after them there followed a posterity who missed prayers and followed after lusts soon, then, will they face Destruction.

 

- niha -

கோடியில் ஒருவனாய் வாழே!

கோடியில் ஒருவனாய் வாழே!

கொள்கையில் திளைத்திட வேண்டும்
கோள்குண்டணி தவிர்த்திட வேண்டும்
உள்ளமை அறிந்திட வேண்டும்
உண்மையில் நிலைத்திட வேண்டும்!

கிள்ளியும் கொள்கை வளர்க்கும்
கள்ளர்கள் கொடுமை களையனும்
அள்ளியும் சென்றிடும் அற்பர்
உள்ளேயும் அனுப்பிட வேண்டும்! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 9:112

தவ்பா செய்கிறவர்கள், வணங்குபவர்கள், புகழ்பவர்கள், நோன்ப நோற்பவர்கள், ருகூவு செய்பவர்கள், சுஜுது செய்பவர்கள், நன்மையானவற்றைச்செய்யுமாறு ஏவுபவர்கள், தீமையை விட்டும் விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள், இத்தகைய முஃமின்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

 

- நிஹா -

 

Al Quran 9:112

 

Those that turn in repentance; that serve Him; and praise Him; that wander in devotion to Cause of Allah; that bow down and prostrate themselves in prayer, that enjoin good and forbid evil; and observe the limits set by Allah, – so proclaim the glad tidings to the Believers. 

 

- niha -

வஹீயை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்பதைப் பிழையாக விளங்கிக் கொண்டு வஹீயையே மறுத்து வரும் மடமைகளைக் களையுங்கள்!

வஹீயை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்பதைப் பிழையாக விளங்கிக் கொண்டு வஹீயையே மறுத்து வரும் மடமைகளைக் களையுங்கள்!

 

வஹீயை மட்டும் பின்பற்றுதலை உலகில் எந்த முட்டாளும் மறுக்கப் போவதில்லை.   வஹீயில் மறைந்துள்ள விடயங்கள் அனைத்தையும் அனைவரும் முழுமையாக அறிந்து விடவில்லை. காலத்துக்குக் காலம் தன்னை விரித்து உலகின்  மாற்றத்தை ஏற்பதற்குத் தயார் நிலையிலுள்ள குர்ஆனை, அதன் கருத்தை அறிந்தோர் உலகில் இல்லை.  அன்றைய நிலையில் அறிந்தோர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஞானம் பெற்றவர்கள் அன்றைய நிலையைத் தாண்டி, அதற்கப்பாலும் ஓரளவு அறிகின்றனர். அதனால்தான் அறிவாளிகளுக்கொல்லாம் அறிவாளிகள் உணள்ளனர் என இறைவன் கூறுகின்றான்.

 

இந்த உண்மையை வெளிப்படுத்துவதே, நீர் அறியாதவராக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.  இவை வஹீயில் கூறப்பட்ட விடயங்கள் என்பதை மறந்துவிடலாகாது. இதனையும் விளங்காதவர்களைக் குறிப்பிட்டுத்தான், விளக்கத்தைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறியிருப்பது. இதற்கும் விளக்கம் பெறாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நாங்கள் குர்ஆனைப் பார்த்து விட்டோம், அதன்படிதான் எல்லாம் செய்வோம் என வீம்பு பேசிக் கொண்டிருப்போர், குருடர்களாகவும், செவிடர்களாகவும் குர்ஆன் என்ற வஹீயில் வீழ்ந்து கிடப்போர்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. Continue reading

Quran Kural! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள்

 

விரித்திடுவான் நெஞ்சத்தை இஸ்லாத்தின் பக்கல்
விரும்பிடில் காட்டிட வழி! 6:125

 

பேசானே அல்லாஹ் மறைவிலிருந்தன்றி யாருடனும்
பேசுவனே வஹீமூல மாய்! 42:51

 

பயந்திடில் துன்பம் பயணத்தில் பகைவரால்
இயம்பினான் தொழுதிட சுருக்கி! 4:101

 

நாலு நூற்றுமூனு விளக்கிடுதே நன்றாக
தொழுகையும் நிலைநிறுத்தலும் வேறு! 4:103

 

பேராசை இரக்கம் மூமின்களில் கொண்ட
சீராளர் கிருபை நபி! 9:28

 

 
- நிஹா -

சாத்திரம் – சூத்திரம் – தோத்திரம் – காத்திரம்.

சாத்திரம் – சூத்திரம் – தோத்திரம் – காத்திரம்.

 

 

சாத்திரம் தந்தவன் அவனே சகல
பாத்திர மான பரமனும் அவனே!
ஆத்திரம் அவசர மின்றி அவனை
தோத்திரம் செய்து காண்பது கடனே!

 

சாத்திரம் அறிவது கடனே வெறும்
சாத்திரம் அறிவதால் பயனேது மகனே!
காத்திரமா யறிந்திடு உன்னை தேறும்
சாத்திரம் அதுவன்றோ நீ காணே!

 

சத்திரம் போன்று தங்கிடும் இவ்வுலகில்
சத்தியமானவனைக் கண்டிடேல் நீயும்
நித்திய வாழ்வான மறுமையில் காயும்நரகில்

அந்தகனாய் நீ அழிவது நிஜமே!

 

- நிஹா -