Category Archives: Politics

கம்மளையிலிட்டுக் கருவறுப்பான்!

கம்மளையிலிட்டுக் கருவறுப்பான்!

 

ஆண்டவனை மறந்து கோரத்
தாண்டவமாடிய கோட்டாவே
ஆண்டவர் பலர் உலகில்
மாண்டொழிந்ததை மறந்தாயோ!

கெட்டபய கோட்டபயவின்
கொட்டமழித்திட இறைவன்
திட்டமிட்டான் அதுவே அவனழிவாம்
பட்டத்து மஹாராஜா தேர்தல்!

குறிக்கப்பட்ட நாள் இறையால்
மறுக்கப்பட முடியாதென்பதைனை
மறக்கப்பட முடியா முடிவாய்
இறக்கி வைத்தான் மண்ணில்!

பட்டழிந்த மக்களின் கண்ணீர்
தட்டழிய வைத்துள்ளது அவர்தமை
விட்டொழியாது விரட்டும்
நட்டமே விளையும் நாசமே எஞ்சும்!

நிம்மதியைக் குலைத்தீ்ர்கள்
நேர்மையை விலை பேசினீர்கள்
நன்மை பெறும் வழிகளை அடைத்து
நம்மை அச்சத்தால் நலியவிட்டீர்!

உம்மை இறைவன் ஒருபோதும்
எம்மை அழிக்க நினைத்ததனால்
சும்மாவிட்டுவிட மாட்டான்
கம்மளையிலிட்டு கருவறுப்பான்!

 

- நிஹா -

தேர்தல் சட்டங்களில் மாற்றம் வேண்டும்!

தேர்தல் சட்டங்களில் மாற்றம் வேண்டும்!

வோட்டைப் போட்‌ட பின்னர் பிச்சைப் பாத்திரம் ஏந்தும்
கேட்டை நீக்கும் சட்டங்கள் வேண்டும்!

வோட்டுப் போட்டு பிரதிநிதிகளாக்கும் வாக்காளருக்கு
வோட்டுப் போட்டவர்களை மீளப் பெறும் சுதந்திரம் வேண்டும்!

நோட்டுக் கற்றைகளால் ‌வோட்டைக் காவு கொள்ளும் கயவர்
கோர்ட் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்!

கள்ள வோட்டுப் போடும் குள்ளநரிக் கூட்டத்தின்
தொல்லை அகலும் கடும் சட்டம் வேண்டும்!

எப்படியும் வெல்வேன் என்று செப்படி வித்தை செய்யும்
குப்பைகள்அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும்!

தேர்தல் சட்ட்ங்கள் மீற இடமளிக்கும்
தேர்தல் ஆணையாளரும் தண்டிக்கப்படல் வேண்டும்.!

கள்ளவோட்டு அடிக்கும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டால்
கொள்ளையர் பட்டமளித்து வாக்குரிமையை பறிக்க வேண்டும்!

அதிகாரத்திலிருக்கும் வரை வேட்புமனு கொடுக்கும்
சதிகாரர் அதிகாரம் நீக்கப்படல் வேண்டும்!

வதியாதார் வோட்டு இனங்காணப்பட்டு நீக்கும்
விதியொன்று செயற்படுத்தப்படல் வேண்டும் ! 

தேர்கால வன்முறைகளை அடக்க சார்க் பொலிஸாரால்
தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படல் வேண்டும்!

 

- நிஹா -

வாக்கு பற்றி ஒரு நோக்கு!

வாக்கு பற்றி ஒரு நோக்கு!

 

 

வோட்டைப் போட்டு கேட்டை வாங்காதீர்கள்!
‌வோட்டைப் பாவித்து கேட்டை விலக்குங்கள்!

ஒருநாள் இன்பத்துக்காக வோட்டை அளித்தால்
வாழ்நாள் முழுதும் துன்பம் விளைக்கும்!

அறிந்து அளியுங்கள் உங்கள் வாக்கை அன்றேல்
அழிவை விலைக்கு வாங்கி விடுவீர்கள்!

அற்ப எண்ணங்களுக்காகப் போடப்படும் வாக்கு
சொற்ப உரிமையையும் அழித்துவிடும்!

விற்றுப் பிழைக்க எண்ணாதீர் வாக்கை
தோற்றுவிடுவீர்கள் உங்கள் பிறப்புரிமையை!

வோட்டுக்கள் நோட்டுக்களுக்கு விற்கப்பட்டால்
வேட்டுக்களால் பதில் தீர்க்கப்படும்!

- நிஹா -

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதீனம்…. ஒரு பார்வை!

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதீனம்…. ஒரு பார்வை!

நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் எனப் பயபக்தியோடு சத்தியஞ் செய்து பாராளுமன்ற அங்கத்தவர்களாகப் பதவி வகிப்போர் அவர்கள் சத்தியம் செய்து எடுத்த உறுதிமொழியைப் பாதுகாக்கத் தவறியுள்ளதன் மூலம், பாராளுமன்றின் சிறப்புரிமைகளை மீறியுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்றி மக்கள் அவர்களிடம் அளித்திருந்த நம்பிக்கைப் பொறுப்பை மீறியுள்ளனரா! அல்லது இரண்டுமா!

யாப்பின் Xஆவது உறுப்புரையின் 63ஆவது பந்தியில் கூறப்பட்ட சத்தியத்தைச் செய்து அதனைச் செயற்படுத்தத் தவறியமை, பாராளுமன்ற அங்கத்தவரது தலையாய கடமையைச் செய்யாமல் புறக்கணித்ததாக அமையுமானால், அந்த அங்கத்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? அவர்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்தமையாகக் கொள்ள முடியுமா? என்பதும் ஓர் முக்கிய விடயமாகக் கருதப்பட வேண்டியதே! சத்தியம் செய்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்தாதவர்கள் பற்றிய நடைமுறைச் சட்டமென்ன? Continue reading

நீதி அழிந்ததுமில்லை! அநீதி இழியாதிருந்ததுமில்லை!

நீதி அழிந்ததுமில்லை!
அநீதி இழியாதிருந்ததுமில்லை!

 
உயர்வில் பணிவு வீழ்ச்சியைத் தடுக்கும்
வியந்து போற்றிப் புகழ்ந்தும் பேசும்
நயந்து வாழ்ந்திட வழியையும் சேர்க்கும்
பயந்திடா நிலையை பாரினில் வளர்க்கும்!

பதவி கிடைப்பது பழிசெய வல்ல
பதவியால் இழிவினை அடைந்திடா வழியில்
முதலாய் அதனை நிதமும் கொண்டு
உதவியே வாழ்ந்து உலகினை வெல்ல! Continue reading

பள்ளிகள் கண்டிடில் உள்ளம் பதறியே அழித்திட எண்ணும்!

பள்ளிகள் கண்டிடில் உள்ளம்
பதறியே அழித்திட எண்ணும்

 

 

நாணத்தின் எதிர்ச் சொல் ஞானசார
மானத்தின் எதிரும் அதுவே
தானத்தின் அடைவும் அதுவே
ஞானத்தின் எதிரும் ஞானாவே!

பானத்தின் ஒத்த சொல் ஞானா
கோணல் குணத்துக்கும் அதுவே
தினம் தினம் தொல்லையும் அழிவும்
தேனாய் இனித்திடும் மதுவும்! Continue reading

வடக்கு முஸ்லிம்களின் இடக்கர் அகற்றுவீர்!

வடக்கு முஸ்லிம்களின் இடக்கர் அகற்றுவீர்!

 

புண்ணியமல்ல நாம் உமைக் கேட்பது
மண்ணில் உள்ள நமது உரிமையே!

 

வருடந் தோறும் எண்ணி மகிழ்ந்தனர்
வாழ்வை இழந்த வடக்கு மக்களை
புருடாக் கதைகள் பலதும் பேசி
குருடர்கள் போன்று கொண்டாடித் தீர்த்தனர்!

புலிகள் விரட்டியது கொடுமைதான் ஆயினும்
புலிகள் பெயரால் காலத்தை ஓட்டி
பழிகள் செய்து தம்வாழ்வினை நகர்த்தும்
பழிகாரர் செயலை பழித்தே விடுவோம்! Continue reading

Long March of People Liberation Army – 1934

சீன கம்யூனிஸ இராணுவத்தினரின் பாத யாத்திரை – 1934

சீனாவில் கம்யூனிஸம் தோற்றம் பெற்ற நிலையில் அன்றைய நெருக்கடி நிலையின் தேவையான தீர்வாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட தூர நடை உலக வரலாற்றில் தனித்துவத்துடன் ‌பேசப்படுவது.

மாவோ சே துங் அவர்களின் தலைமையில், அன்றைய ஆட்சியாளரின் சீன தேசியக் கட்சியின் கே.எம்.ரி என அழைக்கப்பட்ட இராணுவத்தின் அழிவிலிருந்து, மக்களைக் காப்பாற்ற மக்கள் விடுதலை இராணுவம் எனும் கம்யூனிஸ இராணுவத்திரால் முன்னெடுக்கப்பட்டது. இது 1934ஆம் ஆண்டில் தொட்ங்கி முன்னூற்றி எழுபது நாட்களுக்கு மேல் நீடித்தது. அக்கால எல்லையில் அவர்கள் கால்களால் கடந்த தூரம் எட்டாயிரம் மைல்கள். Continue reading

காவியும் பாவியும் !

காவியும் பாவியும் !

 

காவியுள் புகுந்தது புத்தர் அன்று
கர்மம் தொலைத்து காமம் அறுக்க
காவியுள் இன்று காவாலிகள் புகுந்து
காடைத்தனங்களை மேடை ஏற்றுறார்!

காவியில் பாவிகள் படுத்திடும் பாடு
காவியாய் காலிகள் விளைத்திடும் கேடு
தாவியே தாமும் கூவியே நிதமும்
நோவினை செய்வதை நாவினிற் கொண்டார்! Continue reading

வீணன் பேச்சு மலமே நாறும்!

வீணன் பேச்சு மலமே நாறும்!

ஞானசார பழங் காணின் சேறு
மானங்கெட்ட கேணையன் கூறு
ஈனர்களுக்காக தன்மானம் சோரும்
வீணன் பேச்சு மலமே நாறும்!

வாயைத் திறந்தால் வையம் நாறும்
பேயாய் மாறி நாயாய்க் குரைக்கும்
சாய மூட்டிய சண்டாளன் பேரும்
கோயபல்ஸ் பொய்யின் நோயாய் விஞ்சும்! Continue reading