இன்று நாம் பார்க்கும் இந்து சமயத்தைத் தமது மார்க்கமாகக் கொண்டுள்ள மக்கள், பல தெய்வக் கோட்பாடுகளுக்குள் தம்மை முழு மையாக ஆழ்த்திக் கொண்டுள்ளனர் என்பதை நாடெங்கிலும் காணப்படும் வெவ்வேறு தெய்வங்களுக்கான கோயில்களும், நாள் தவறாது நடைபெறும் திருவிழாக்களும், மற்றுமுள்ளவைகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக் கின்றன. இவைகள்தான் இந்து சமய வேதங்கள் கூறும் கொள்கைகளா என எண்ணிப் பார்த்தால் விடை எதிரிடையான தாகவே காணப்படுவதை அவதானிக்கலாம்.

இந்து சமயம் என நாமழைக்கும் இந்த பெயர், இடைப்பட்ட காலத்தில் வெள்ளயைர்கள் ஆட்சிக் காலத்தில், அவர்களால் சனாதன தர்மத்துக்குக் கொடுக்கப்பட்டதாகவே தெரிகின்றது. இந்து மத வேதங்கள்தான் ஆதியானவை அல்லது ஆதி மதத்துக்கு அடுத்தபடியாகத் தோன்றியவையாக இருக்க வேண்டும். ஆயினும், நிச்சயமாக, முக்கிய மூன்று வேதங்களான தோறா, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றுக்கும் முந்தியதாகவே உள்ளது. இதற்குப் பிந்திய வேதங்கள் யாவும் யாரோ ஒரு இறை தூதர் மூலம் இறைவனால் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இந்து வேதங்கள் மட்டும் ஒரு புறநடையாகவே இருப்பதையும் அவதானிக்கலாம். Continue reading