சீர்திருத்தத்தின் போதுகூட குழப்பம் உருவாவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை

நல்ல நோக்குடன் தொடரும் காரியங்களால் ஏற்படும் குழப்பங்களை இரு விதமாகப் பார்க்கலாம். ஒன்று அவர்கள் நல்லதென்று எண்ணிச் ‌செய்யும் காரியங்களால் குழப்பம் உருவாவது.  அடுத்தது, மனோ இச்சை சார்ந்து, நல்லது என எண்ணி பிழையான காரியத்தை முன்னெடுப்பது. இதனால் ஏற்படும் குழப்பம்.

முன்னைய நல்லதென்று எண்ணிச் ‌செய்யும் காரியங்களால் குழப்பம் உருவாவதை மேலும் இரு பிரிவுகளாகக் கூறலாம். அதாவது அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் சீர்திருத்தத்துக்கான உண்மைகள் வெளியாகும் போது ஏற்படும் குழப்பம். நிராகரிப்பாளரால் ஏற்படுத்தப்படும் குழப்பம். இது நபிமார் காலத்தில் ஏற்பட்ட குழப்பம் சார்ந்தது.

முன்னையதில் இரண்டாம் வகை மனோ இச்சை சார்ந்து, நல்லது என எண்ணி பிழையான காரியத்தை முன்னெடுப்பது, ஒரு பிழை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கு நடப்பது பிழை எனக் கண்டு கொண்ட ஒருவர் சீர்திருத்தும் நோக்குடன் உண்மையை வெளிப்படுத்துகிறார். அப்போது சீர்திருத்தத்தினை விரும்பாதோர் குழப்பமாக மாற்றி விடுகின்றனர். பிழையான கருதுகோளைச் சரியானது என நினைந்து நடத்திக் கொண்டிருப்பவர்களால்> உண்மையை ஏற்கும் மனப்பக்குவம் அற்றவர்களால் ஏற்படுத்தப்படுவது. இதில்அறியாமையும் கணிசமான பங்கினை ஏற்கும். சாதாரண மனித வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருப்பது.

பின்னையதும் இரு வகைத்து. அண்மைக் காலங்களில் ஏற்பட்ட குழப்பம், ஏதோ மக்களுக்கு நன்மை செய்வதாக நினைத்து பிழையாக நடவடிக்கைகளில் இறங்குவதால் ஏற்பட்ட குழப்பம். மனோஇச்சை சார்ந்தது. இது இரண்டாம் வகையில் முதலாவது. இதனை அறியாமையால் ஏற்படுத்தப்பட்ட குழப்பமாகவும் எடுக்கலாம். நோக்கம் நன்று, ஆனால் பிழையான நடைமுறை.  அண்மைக்காலத்தில் நாம் அனுபவித்தவை> தற்போதும் அனுபவித்துக் கொண்டிருப்பவை. உணவு> உடைகளால் உருவானவை. இது முழுமையாகப் பிறரால்> சில பாதிப்புகளின் காரணமாக அல்லது பாதிப்பை உண்டாக்கும் எனக் கருதுபவர்களால் ஏற்படுத்தப்படுபவை. இது அல்லாஹ்வால்> தனது அடியார்கள் வழிதவறும் நேரங்களில் அடுத்தவரால் ஏற்படுத்தப்படும் சோதனையாகவும் இருக்கலாம்!

அன்றி  இரண்டாம் வகையில் இரண்டாவதான , அறிவு வந்த பின்னரேயன்றி அவர்கள் நிராகரிக்கவி்ல்லை என்ற அல்லாஹ்வின் வகைப்படுத்தலுக்கு உட்பட்டதாகவும் எடுக்கலாம். மறுதலையாக இதனை வேண்டு மென்றே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் கொள்ளலாம். இங்கு நோக்கம் தீயது.  அல்லாஹ் மிகவும் அறிந்தவன். நாமறியமாட்டோம்.  இங்கு குழப்பத்துக்குக் காரணமானவர்கள் மிதமிஞ்சிய வழியில் தாம் அறிந்திருந்தவற்றை நடைமுறைப்படுத்துவதாகக் கொள்ளலாம். இதனையே அந்நியர் தீவிரவாதம். அடிப்படைவாதம் என்றெல்லாம் குறை கூறுகின்றனர்.  இதற்கு மார்க்கத்திற்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது.  மொத்தத்தில் குழப்பங்கள் அனைத்திற்கும் அறியாமையே ஏதோ வகையில் காரணமாக அமைந்து விடுகின்றது

அறியாமையால் ஏற்படுத்தப்படும் குழப்பம். இன்னொன்று அறிந்து கொண்டே வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் குழப்பம். இதனைத்தான் அல்லாஹ், 6:119 … மேலும், நிச்சயமாகப் பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும், தங்களது மனோஇச்சைகளின் காரணத்தாலும் திட்டமாக வழி கெடுக்கின்றனர், எனக் கூறியுள்ளான்.   இங்கு அல்லாஹ் இரண்டையும் மிக இலகுவாக வெளிப்படுத்தி உள்ளான் என எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பொருளுக்கு, நடப்பிற்கு, செயலுக்குப் பல பார்வைகள் உண்டு. அவை பார்ப்பவர் மனோநிலை, அறிவு, அனுபவம், தேவை, போன்றவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு கருத்துகளைக் கொடுக்கும். அவை அவ்வவற்றுக்குரிய இடங்களில் பொருத்தமாக இருக்கும். எல்லா இடங்களிலும் பாவிக்க முற்படின் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். குழப்பங்‌களை உருவாக்கும். அதனை விளக்க இவ்விடம் போதாது.

சுருக்கமாக, செயல் ஒன்றைப் பார்க்கும் ஒருவரின் அறிவை, உளப் பாங்கைப் பொறுத்து, அச்செயல் குழப்பமாகவோ, சீர்திருத்தமாகவோ பொருள் கொடுக்கப்படுகின்றது. அதனால் உண்மை நிலையை விளங்குவதில் மக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். அப்போது பொறுமையும் கூட அவர்களிடம் காணப்படுவதில்லை, இதுவே குழப்பமாக உருவெடுத்து விடுகிறது.  இதன் மூலமான, பின்னணிக் காரணம் அறியாமையே!

இதனைத்தான் குர்ஆன்,   உங்களுக்கு எதில் ஞானமில்லையோ, அதில் உங்களால் பொறுமையாக இருக்க முடியாது என தீர்ப்புக் கூறுகிறது. அதனால்தான் கற்றறிந்த மனிதரிடம், அவர் கற்றுக் கொண்டதில் சிலவற்றைப் பெற்றுக் கொள்ளச் சென்ற மூஸா அலை அவர்கள் குழப்பமடைந்து பிரிய வேண்டி வந்தது. மூஸா அலை அவர்களுக்கு குழப்பமாகவும், அநியாயமாகவும், அக்கிரமமாகவும் தெரிந்த அந்த கற்றறிந்த மனிதரின் செயற்பாடுகள் உண்மையில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள குழப்பங்களை, அநீதிகளை இல்லாதொழிப்பதற்காக முன்கூட்டியே செய்யப்படுபவை. இவை தீர்க்கதரிசன செயற்பாடுகள். எல்லோராலும் விளங்கிக் கொள்ளப்படுவதில்லை. கட்டாயமாகத் தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திப்பது. குப்பைகளைக் கண்ட இடத்தில் போடுவதைக் குற்றம் என்று தண்டனைக்கு உட்படுத்தல். கட்டாயக் கல்வி போன்றவைகளை உதாரணமாகக் கூறலாம்.  மனித சட்டம் சீர்திருத்தத்திற்காகக் கையாளும் நிர்பந்தத்துடன் நடைமுறைப்படுத்தும் நிலை!

இவ்வறிய‌ாமையை நீக்கும் வழியாகவே, நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எனக் குர்ஆன் கூறியிருப்பதும். அறிந்தவர்களைத் தேடுவதில், இனங் காண்பதில் உள்ள கஷ்டத்தை நீக்கி, நம்பகத் தன்மையை அடைவதற்காகவே இக்கட்டுரையில் குறித்துச் சொல்லப்பட்ட பின்வரும் கட்டளை அடுத்த பந்தியில் கொடுக்கப் படுகின்றது. சுகாதாரப் பிரிவினரிடம் ஆலோசனை பெறல், பாடசாலை செல்லல் போன்றவையாக வகைப்படுத்தலாம்.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல் குர்ஆன் 4:59).   உலக வாழ்வில் நாட்டின் சட்டத்தை ஏற்று அதற்கமைய நமது நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல் என்பதாகக் கொள்ளலாம்.  சட்ட அதிகாரம் பெற்றவர்களிடம் தீர்ப்புக்காகச் செல்வதைக் கூறலாம்.

மேற்கண்ட வசனம், நீங்கள் வழிப்பட்டிருந்த அதிகாரம் பெற்றவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் இஸ்லாத்துக்குள் பிணக்கு ஏற்படுமாயின், அதன் தீர்ப்புக்காக அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் செல்லும்படி பணிக்கின்றது.  அத்தோடு, தீர்ப்பு வழங்குவோருக்கு  ஓர் அறிவுறுத்தலையும் விடுகிறது 4:105 வசனம். அது, அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் நிச்சயமாக நாம் இறக்கியுள்ளோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவராக நீர் ஆகிவிடாதீர்.” சட்ட அதிகாரம் பெற்றவர்களிடம் தீர்ப்புக்காகச் செல்வதைக் கூறலாம்.  இது இஸ்லாமிய வாழ்வில் குர்ஆனைப் பின்பற்றும் நோக்கில், அதில் பரிந்துரைத்தபடி தீர்ப்புகளைப் பெற குர்ஆனிய சடடங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்புக்கள் உருவாவதனைக் கூறலாம் வக்பு, காதி நீதிமன்றங்கள் போன்றவை. இவற்றுள் அடங்காதவற்றை குர்ஆனிய அறிஞர்கள் அமைப்பு ஒன்று கையாளுதல். மேலும், இஸ்லாமிய நடைமுறை எனக் கருதி செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது குழப்பம் உருவாகுமாயின்> அதற்கும் குர்ஆனையே நாம் நாட வேண்டும்.  குர்ஆனியச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நிச்சயமாகக் குழப்பம் உருவாகாது என்பதே எனது தீர்க்கமான முடிவு. அதனையும்> மேற்கண்ட 4:105 உறுதிப்படுத்தும்.

மொத்தத்தில், மனித மேம்பாட்டை அடிநாதமாகக் கொண்டு, முழு மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், அனைத்துக் காரியஙகளுக்கும் தீர்வாகவும் அருளப்பட்ட குர்ஆனுக்கு மாற்றமாக  நடைபெறும் எக்காரியமும் குழப்பமானதே! சில ஆரம்பத்தில் நல்லவை! போல் காட்சிப்படுத்திடினும் முடிவு தீமையாகவே இருக்கும்.

குழப்பமற்ற நிலையில் உலகில் சீர்திருத்தத்தை உருவாக்கும் நோக்கிலேயே, குர்ஆனியக் கருத்துக்கள் 23 வருட கலமாக, மார்க்கத்தில் நி்ர்ப்பந்தமில்லை என்ற கோட்பாட்டுடன் இறக்கியருளப்பட்டன. அவ்வகையில் அடிமைத்தளை எவ்வித நிர்ப்பந்தமுமின்றி, யாருக்கும் நோவின்றி இருந்த இடம் தெரியாது இல்லாதொழிக்கப்பட்டது. மது, சூது, விபச்சாரம் போன்றவை எதிர்ப்பின்றி தடைக்காளாகியது.  உணவில் ஹறாம் – அவை அசுத்தமானது என்பதால் என்ற – நியாயபூர்வத்துடன், நிர்ப்பந்தம் என்ற விதிவிலக்குடன் நிறைவேறியது. றிபா இல்லாதொழிக்கப் பட்டது.  தர்மம் தமது விருப்புடன் வளர்க்கப்பட்டது.

அநியாயக் கொலைகள் தடுக்கப்பட்டன.  பழிக்குப்பழி என்பது கூட பெருமனது கொண்டு மன்னிக்கும் மனப்பான்மை உருவாக்கப்பட்டது. மானத்தைக் காக்கும் அலங்காரமான, அழகிய உடைகளின் அறிமுகம். முறையான மஹர் கொடுக்கும் திருமணம், பெண் மானத்தையும், பிறக்கும் குழந்தையினது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் இத்தா, மறுமணத்தின் மூலம் விதவைகளுக்கு வாழ்வு,  சகோதரத்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்ணுரிமை பேணப்பட்டது. சொத்துரிமை, பாகப்பிரிவினை, சொத்தில் இல்லாதோருக்கும் பங்கு என்ற பண்பு அறிமுகம். மெளட்டீகம் மறக்கடிக்கப்பட்டது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

சீர்திருத்தத்தின் போது கூட குழப்பம் உருவாவதை அல்லாஹ் விரும்பாததனாலேயே உலகையே சீர்திருத்த வந்த நபிகளாருக்கு, தனது சீர்திருத்தக் கருத்துக்களை வெளிப்படுத்துவதை மட்டுமே கடமை ஆக்கியுள்ளான்.  நல்வழி காட்டும் பொறுப்பைத் தனது கடமையாக்கிக் கொண்டான்.  அன்றேல், இஸ்லாமும்கூட வன்முறையில் தனது இலக்கை அடைய முயன்றிருக்கும்.  நபிமார் அனைவரதும் கடமை எதிவைத்தல் என்பதோடு, அதிகாரப் பரப்பு எத்தி வைத்தலுடன் மட்டுப்படுத்தப்பட்டிராவிடில், தனது கடமையைச் செய்வதற்காக எதனையும் செய்யும் மனப்பாங்கை விளைத்திருக்கும். சீர்திருத்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நபிமாரும் இறைகருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே தமது வேலையாகப் பொருந்திக் கொண்டனர். நடைபெற்ற யுத்தங்கள்கூட இறையாணையுடன் பாதுகாப்புக் கருதி செய்யப்படனவே!

இவை எதனை நமக்குக் காட்டுகிறதென்றால், சீர்திருத்தம் கூட குழப்பத்தை உருவாக்காத நிலையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதையே! அல்லாஹ்வே சீர்திருத்தவாதி. குர்ஆனே உலகின் சீர்திருத்தத்துக்கான உண்மைகள் கொண்ட ஆவணம்.

விஷேடமாக> இஸ்லாத்தை ஏற்பது முதல்> பின்பற்றி முடிப்பது வரை நிர்ப்பந்தம் கிடையாது என்பதை அல்லாஹ் பல வழிகளில் வெளிப்படுத்தி உள்ளான். நிர்ப்பந்தம் மூலம் ஒன்றை அடைய வைப்பது முடிவில் குழப்பத்தைத் தவிர எதனையும்  கொண்டிராது. அதனாலேயே> நபிகளார் ஸல் அவர்களுக்கு உரிய கூலியை நிர்ணயித்ததன் மூலம் வெளிப்படுத்தினான். அது அறியாமை களைந்து> அறிவின் வழியில் செலுத்தப்படுவதனால் தனது ரப்பின் பாதையில் பயணிப்பவர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.  25:57 - இதன் மீது உங்களிடம் எத்தகைய கூலியையும் நான் கேட்கவில்லை. தனது ரப்பின்பால் ஏதேனும் ஒருவழியை ஏற்படுத்திக் கொள்ள நாடுகிறவனைத்தவிர என்று கூறுவீராக! ஆக> குழப்பமற்ற, நிர்ப்பந்தமற்ற முறையில் சீர்திருத்தக் கருத்துக்கள் சென்றடைவது என்பது இவற்றினால் பெறப்படுகின்றது.

– நிஹா –