குறள் நெறி!

 

பேச்சு மூச்சால் வருதலால் பேச்சில்
இச்சை தவிர்த்தல் நெறி!

 

கருத்தை விரித்து சிரிப்பால் சீர்படுத்தி
வருத்திடாது வாயைப் பேணே!

 

காலாட்டின் கடந்திடும் காதம் மீறி
வாலாட்டின் வருமோ இடம்!

 

பேசிடுக தக்கதை பேசற்க மற்றதை
தோஷியாம் வாழ்வை மாற்று!

 

நற்சொல் நலந்தந்து பெற்றிடுமே பேறும்
இச்சையிலாது இயம்பப் பெறின்!

 

- நிஹா -