Daily Archives: November 14, 2014

Quran Kural! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள்

 

விரித்திடுவான் நெஞ்சத்தை இஸ்லாத்தின் பக்கல்
விரும்பிடில் காட்டிட வழி! 6:125

 

பேசானே அல்லாஹ் மறைவிலிருந்தன்றி யாருடனும்
பேசுவனே வஹீமூல மாய்! 42:51

 

பயந்திடில் துன்பம் பயணத்தில் பகைவரால்
இயம்பினான் தொழுதிட சுருக்கி! 4:101

 

நாலு நூற்றுமூனு விளக்கிடுதே நன்றாக
தொழுகையும் நிலைநிறுத்தலும் வேறு! 4:103

 

பேராசை இரக்கம் மூமின்களில் கொண்ட
சீராளர் கிருபை நபி! 9:28

 

 
- நிஹா -

சாத்திரம் – சூத்திரம் – தோத்திரம் – காத்திரம்.

சாத்திரம் – சூத்திரம் – தோத்திரம் – காத்திரம்.

 

 

சாத்திரம் தந்தவன் அவனே சகல
பாத்திர மான பரமனும் அவனே!
ஆத்திரம் அவசர மின்றி அவனை
தோத்திரம் செய்து காண்பது கடனே!

 

சாத்திரம் அறிவது கடனே வெறும்
சாத்திரம் அறிவதால் பயனேது மகனே!
காத்திரமா யறிந்திடு உன்னை தேறும்
சாத்திரம் அதுவன்றோ நீ காணே!

 

சத்திரம் போன்று தங்கிடும் இவ்வுலகில்
சத்தியமானவனைக் கண்டிடேல் நீயும்
நித்திய வாழ்வான மறுமையில் காயும்நரகில்

அந்தகனாய் நீ அழிவது நிஜமே!

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 27:16

சுலைமான் தாவூதுக்கு வாரிசாக ஆனார். “இன்னும் மனிதர்களே! பறவையின் மொழியை நாங்கள் கற்றுக் கொடுக்கப்படுள்ளோம். அனைத்துப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளோம். நிச்சயமாக இதுதான் மிகத் தெளிவான பேரருளாகும்.“ என அவர் கூறினார்.

- நிஹா -

 

Al Quran 27:16

 

And Solomon wasDavid’s heir.  He said, “O ye people! We have been taught the speech of birds, and we have been given of every thing. This is indeed grace manifest”

 

- niha -