Daily Archives: November 8, 2014

பொதுக் குறள் !

பொதுக் குறள் !

 

கார்மேகம் கவிழ்ந்தால் நன்றேதரும் நீரை
கார்வேகம் பறிக்கு முயிரை!

போர்மேகம் சூழும் பார்மீது எங்கும்
சீர்கெட்டோ ர் ஆட்சி யாலே! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 6:72

மேலும், நீங்கள்  தொழுகையை நிலைநிறுத்தி, அவனையே அஞ்சுங்கள். அவன்பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்!

 

- நிஹா -

Al Quran 6:72

” To establish regular prayers and to fear Allah: for it is to Him that we shall  be gathered together”

- niha -

நற்சிந்தனை 31

நற்சிந்தனை 31

ஒளியும் பார்த்தலும்

ஒளியின்றேல் பார்வையில்லை. ஆயினும் ஒளியைப் பார்த்தவரும் உலகில் இல்லை.

அல்லாஹ். பகலைப் பார்ப்பதற்காகப் படைத்திருக்கிறேன் என்று கூறியதும், பகலில்தான் ஒளி வருகின்றது, அது சூரிய ஒளி என்பதை வெளிப்படுத்தவுமாக இருக்கலாம். இரவை ஒய்வுக்காக எனக் கூறினானே தவிர, இரவில் பார்க்க முடியாது என்றும் கூறவில்லை. அப்படியாயின், இரவில் பார்க்கலாம் என்றுதானே பொருள். ஆம் நாம் சந்திர ஒளியால் பார்க்கவும் செய்கிறோம். ஏன்றாலும் அவ்வொளி பொருட்களைக், காட்சிகளை கறுப்பு வெள்ளை தொலைக் காட்சிப் பெட்டியில் பார்ப்பது போன்று கறுப்பும் அதன் வெளிறிய சாம்பல் நிறங்களாகக் காட்டுமே அல்லாது, பல நிறங்களில் காட்டுவதில்லை. சந்திரனின் ஒளி தான விழும் பொருளின் நிறத்தைக் களவாடி விடுகிறது. இது விஞ்ஞானக் கட்டுரை அல்லவென்பதால் இந்த அளவில் தெரிந்து கொள்ளலாம் மேலும், சந்திர ஒளியில் ஒரு புத்தகத்தை வாசிக்கவும் முடியாது, வெகு சிலரைத் தவிர, வாசிக்க முற்பட்டால் எழுத்துக்கள் மறைந்து விடும். பகலிலும் சந்திரன் வந்தாலும், அது சில காலங்களில் பார்வைக்குத் தெரிந்தாலும், அதிலிருந்து இரவில் போன்று ஒளி வெளிவருவது தெரிவதில்லை. Continue reading