நற்சிந்தனை ! 11
ஆற்றல்களின் வெளிப்பாடு அமரத்துவத்தைத் தரும்!
நமது ஆற்றல்கள் உலக மாந்தரின் உய்வுக்காக ஏதாவதொரு வகையில் வெளிப்படுத்தப்படுவதே நாம் மனிதனாகப் பிறந்ததன் முக்கியத்துவத்தை நிறைவு செய்வது!
இம்முக்கியத்துவமே, நம்மை மறுமை வாழ்வுக்கும் தயார்படுத்தி விடும்!
இதையே அல்லாஹ். ஈமான் கொண்டு நற்காரியங்கள் செய்வோர் சுவனத்துள் நுழைந்து விடுவர் என்கின்றான். சுவனத்தின் அனைத்து வாசல்களும் திறந்தே இருக்கும். இதனாலேயே இஸ்லாம் சாந்தி மார்க்கமாகின்றது.
சுவனத்துள் நுழைந்து விடுவர் என்பது பல்வேறு உண்மைகளை உள்ளடக்கி உள்ளது. உய்த்துணர்தல் அவசியம்.