Daily Archives: March 12, 2014

நெல்லிக் கனியின் மகிமை சொல்லி முடியாது!

நெல்லிக்கனியின் மகிமை சொல்லி முடியாது!

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினால் மிகையாகாது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 2:114

 

மேலும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில், அவனின் திருப்பெயர் துதிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழ்படுத்துவதில் முயன்று கொண்டிருப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களாக அல்லாமல் அவற்றுள் நுழைந்திட அவர்களுக்குத் தகுதி இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.

 
- நிஹா -