Daily Archives: October 14, 2013

இறை இருப்பை அறிவிக்கும் அறிவியல் உண்மைகளும்; இறைவெளிப்பாடுகளும்

இப்பேரண்டத்தைப் வடிவமைத்து, படைத்து, விரிவுபடுத்தி, இற்றைவரை பரிபாலித்துவரும் வல்ல இறைவன் நாம் வாழும் இப்புவியை அமைத்துள்ள விதம் அவனது இருப்புக்குச் சான்று தருவனவற்றுள் முதன்மையானது. 2:117. வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி, தானே உண்டாக்கினான். 27:61. இந்தப் புமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக் கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? இது சம்பந்தமாக விளக்கங்கள் தரப்புகின் அது தொடர் ஆகிவிடும். அதனால் சிலவற்றைக் கூறுகிறேன். Continue reading

நினைவில் நின்றவை 41 – உள்ளூர் பிரபலங்கள் ஒரு பார்வை …..

உள்ளூர் பிரபலங்கள் ஒரு பார்வை …..

எனது சமூக சேவையோடு தொடர்புள்ள வாழ்வில் நான் பலரைச் சந்தித்து, உறவாடி, பல்வேறு தேவைகளை நிறைவேற்றிய போது அவர்களது குணாதிசயங்களும், நடத்தைகளும், அறிவார்ந்த செயற்பாடுகளும், அவர்தம் நேர்மையும், உண்மைத் தன்மையும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. மட்டுமல்ல அவை என ஆளுமையிலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மாற்றங்களை ஏற்டுத்தி இருந்தன. அவர்கள் பற்றி எனக்கிருந்த மதிப்பைவிட, என்னைப் பற்றி அவர்களுக்கிருந்த மதிப்பே சமூகத்தில் எனக்கு முக்கியத்துவத்தையும், முதலிடத்தையும் வழங்கின. எந்த விடயம் என்றாலும், அதற்காக பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் போது, முதலாவது அவர்கள் கண்முன் தெரிவது நிஸாமாகவே இருந்தது என்று கூறுவதே எனக்குப் பெருமையாக உள்ளது. அந்தளவு அபிமானத்தை அவர்கள் என்மீது வைத்திருந்தார்கள். இதற்கு என்னிடம் காணப்பட்ட நேர்மை, உண்மை, பயமின்மை, பக்கச்சார்பின்மை, துணிவு, எந்த இடத்திற்கும் பொருந்திப் போகும் எனது ஆளுமை, தன்னலமின்மை, எதிர்பார்ப்பின்மை போன்ற இத்தியாதி காரணங்கள் இருந்தன. அவர்களது பார்வையில் நான் மிக உயர்ந்த நிலையிலும், அவர்தம் எண்ணத்தில் நான் இன்னும் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற அவாவும், எனது ப்ளஸ் பொயின்ட்ஸ் ஆகியிருந்தன. அதனால் எனது செயற்பாடுகள் தங்குதடையின்றி, பெரும் ஆதரவுடன் மேடையேறின. ஓவ்வொரு செயற்பாட்டிலும் ஒரு புதுமையும் மெருகும் ஏறியிருக்கும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வந்தமையால் இன்னும் திறமையாகச் செய்ய வேண்டும் என்ற உந்துதலுடன் எனது சிந்தனை ஓர் முகத்தை நோக்கியிருக்கும். மெழுகுதிரி போன்று ஒளிவீசி இருள்போக்கி நான் அழிந்துவிடவில்லை. மாறாக நானும் மெருகேறினேன், மணம் வீசினேன். அதன் பயனைப் பலரும் அநுபவித்தனர். Continue reading

மனித வாழ்வு …

உலகம் தோன்றிய காலம் முதல் மனித வாழ்வுக்கு இன்றியமையாதவையாக உள்ளவை உணவு, உடை, உறைவிடம் என்பது புதிதான செய்தியல்ல. எனது நோக்கமும் அது பற்றி எழுதி எனதும் உங்களதும் நேரத்தைப் பாழடிப்பதல்ல. மாறாக அவற்றின் அன்றைய நிலையும், அண்மைக் காலமாற்றத்தாலும், நாகரிக வளர்ச்சியாலும், விஞ்ஞான கண்டுபிடிப்புக்களாலும் ஏற்பட்டுள்ள தற்போதைய மனித அவலங்களினதும் அதன் பக்க அல்லது பின்விளைவுகளையும் சற்று உங்கள் கண்முன் நிறுத்துவதும், அதன் மூலம் மனித வாழ்வின் நிறை தன்மையை நோக்கிய பாதையில் உங்கள் கவனத்தை ஈர்ப்பதுமே.
மூன்று ‘உ’ க்களும் அத்தியாவசியம் என்ற நிலையைத் தாண்டியதால் ஏற்பட்ட நிகழ்வுகள், அநுமார் வாலாக நீண்டபோது… Continue reading

Quran on Lies and Deception

Salaam

As a Muslim, you don’t need to get confused or puzzled. You are on the righteous path Islam.  It has given us Holy book Quran. It is a Guidance to the mankind, given by Allah. That will you answers to any thing you want.

Answering your question.

1. Lies; is totally Harram. Quran says:  If any one disputes in this matter with thee, now after (full) knowledge Hath come to thee, say: “Come! let us gather together,- our sons and your sons, our women and your women, ourselves and yourselves: Then let us earnestly pray, and invoke the curse of Allah on those who lie!”

(  سورة آل عمران  , Aal-e-Imran, Chapter #3, Verse #61)   – Also read verse 64 Continue reading