25:44 – ”அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்கிறார்கள் என்று நீர் எண்ணிக் கொண்டீரா? அவர்கள் கால்நடை யைப் போன்றவர்களேயன்றி வேறில்லை; அன்றியும், அவர்கள் பாதை யால் மிக வழிகெட்டவர்கள்.”
மேற்கண்ட வசனம் குர்ஆன் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதன் அத்தி யாவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. மனிதன் என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள குர்ஆனை அறிந்திருக்க வேண்டியுள்ளது. மனிதனை மந்தைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதும் குர்ஆனிய அறிவே! விளங்கிக் கொள்ளாதவர்களை அல்லாஹ் கால்நடைகள் என்றே கூறியிருப்பது, நமக்கு தரப்பட்ட ஆறாவதறிவை, நுண்ணறிவை இலக்கு வைத்துக் கூறப்பட்டதே!. இக் குர்ஆனை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? உய்த்துணர்ந்து நல்லறிவு பெற வேண்டாமா? போன்ற கேள்விகள் அல்லாஹ்வால், நாம் குர்ஆனில் உள்ளவற்றை சிந்திக்க வேண்டும், உய்த்துணர வேண்டும் என்ற தூண்டுதலை உருவாக்கும் வினாக்களாக வெளிப்பட்டுள்ளன.
புனித பைபிளில் கூட இதனையொத்த வசனம் காணப்படுகின்றது. இது வேதம் அறியப்படாத நிலையை வெளிப்படுத்துவது. Continue reading →