வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாளில் வெறியாட்டமும் தம்புள்ள பள்ளிவாயல் தகர்ப்பும்
நேற்று இருபதாம் (20.04.2012) திகதி வெள்ளிக்கிழமை, அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட ஜும்ஆ விஷேட தொழுகையை மேற்கொள்ள விடாது, வணக்கவாளிகளைச் சொல்லாலும், கல்லாலும், பொல்லாலும் தாக்கி விரட்டி உள்ளனர். வணக்கவாளிகளின் மீதும் பள்ளியின் மீதும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்குத் தலைமை தாங்கி நடத்தியோர், காவியுடை அணிந்த பௌத்த குருமார் எனக் கூறப்படும் சில குண்டர்களும், பௌத்த பக்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் வெள்ளையுடை அணிந்த தருவிக்கப்பட்ட காடையர்களான ஆண்களும் பெண்களுமாவர். Continue reading