Daily Archives: October 7, 2013

பெண்ணியம் புன்னியமல்ல, பெரும் புண்ணியம், உயர் கண்ணியம்.

ஆசியாவில் குறிப்பாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளி லேயே அதிக அளவில் பெண்ணியம் பற்றிப் பேசப்படுகின்றது. பெண்ணியம் பற்றிப் பேசுவதே பெருமை சேர்ப்பதாகவும், உயர் பண்பாகவும், தாராளத் தன்மையைக் காட்டுவதாகவும், கலாசார மேன்மையைக் குறிப்பதாகவும், கௌரவமாகவும், பெண்களுக்குக் கொடுக்கப்படும் மதிப்பாகவும், மரியாதையாகவும் போன்ற வகையில் சிந்திக்கப்படுகின்றன. எழுதப்படு கின்றன. பேசப்படுகின்றன. போராட்டங்கள், கோஷங்கள் என வளர்ந்து கொண்டே போகின்றன. பெண்ணியம் பற்றிப் பேச விழைபவர்கள் பெண்ணியத்திற்கான வரைவிலக் கணம், வரம்பு, பண்பு போன்றவற்றை அறியாதவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களது அனைத்துச் செயற்பாடுகளும் எதிர்த் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

Continue reading

பாதங்களைப் பாதிக்கும் கால் ஆணி

கால் ஆணி                             

பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.

இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. Continue reading

Previous birth Hinduism vs Islam! குர்ஆன் வழியில்…

குர்ஆனின் பார்வையில் முன்ஜென்மம் 

அறிமுகம்: முன் ஜென்மம் பற்றிய பல தகவல்களை ஏலவே அறிந்திருந் தாலும் அவை பற்றி எழுதும் எண்ணம் எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை. காரணம் அந்த விடயத்தில், ஏதோ ஒரு விதத்தில் நாமறியாத சில உண்மைகள் பொதிந்துள்ளன என நான் எண்ணியிருந்ததே! அப்படியான வைகள் மக்களால் விளங்கிக் கொள்ளப்பட்ட விதத்தில் குளறுபடிகள் இருக்க வேண்டும் என்பதும் எனது எண்ணம். அதற்குக் காரணம், அது போன்ற ஏழு ஜென்மம் அல்லது அதற்கு மேலும்  எடுக்கும் கொள்கைகள் எப்படியோ மதங்களின் பெயரால் கூறப்பட்டுக் கொண்டிருந்தமையே!

மதங்களில் அவை காணப்படுகின்றனவோ என்னவோ தனது உலக வாழ்வை நிறைவு செய்யாத ஆவிகள் பேயாக அலைவதாகவும், சில அவரவர் நடபடிகளுக்கு ஏற்ப ஜென்மங்களை எடுத்து முன் ஜென்ம வினையைத் தீர்ப்பதாகவும் மக்கள் மத்தியில் கதைகள் கூறப்படுகின்றன. முத்தியடைந்த ஆன்மா பிறப்பை நிறுத்திக் கொள்வதாகவும் கூறப்படு கிறது. இவைகளுக்கு எல்லாம் ஆதாரங்கள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. கர்ண பரம்பரையாக வந்த கதைகள் உள. Continue reading

திருமணத்தை வலியுறுத்தி வரம்பிட்டு வழிகாட்டும் திருக்குர்ஆன்

அனைத்து உயிரினங்களினதும் இனப் பரம்பலுக்கு வல்ல அல்லாஹ் வகுத்த வழியே ஆண் பெண் உறவு. ஆதம் – ஹவ்வா, ஈஸா தவிர்ந்த அனைத்து மனிதர்களும் ஆண்-பெண் இணைவால் உருவானவர்களே. உலகம் தோன்றிய காலத்தில் முதல் மனிதர் இருவரைத் தவிர மற்றையோர் தற்போதைய முறையில் திருமணம் செய்து வாழ்ந்தவர்களல்லர். முதல் மனிதருக்குப் பிறந்த குழந்தைகள் ஆண் பெண்ணாகப் பிறந்ததாக வரலாறு விளம்புகின்றது. அந்த வகையில் அன்றைய நிலையில் சகோதரர் மத்தியிலேயே பாலியல் நடவடிக்கைகள் நடந்து இனப் பெருக்கம் நிகழ்ந்திருக்க வேண்டும். Continue reading