Daily Archives: October 3, 2013

அன்று அரசவை துகிலுரிப்பு இன்று அரங்க ஆடையவிழ்ப்பு!

முழு மனித குலமும் வெட்கித் தலைகுனிய வைத்த செய்தியே பாஞ்சாலி துகிலுரிப்பு. உலக வரலாற்றைக் கறைபடுத்திய பல நிகழ்வுகளில் ஆதியானது. அந்நிகழ்வு உண்மையோ கற்பனையோ எதுவாயினும் அதனை இலக்கியமாகக் கொள்ளுதல் மனித நாகரிகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதே! தாய்க்குலத்தைத் தலைகுனிய வைப்பதே! அதனைப் பாடியோர் எவராயினும் இகழப்பட வேண்டியவர்களே! தவிர புகழப்படக் கூடியவர்கள் அல்லர். அக்கதையைப் பாடநூலாக்கிய அனைவரும் பகுத்தறிவற்ற ஜென்மங்களே! அதனைப் புத்தக வடிவில் கொணர்ந்தோர் சமூகக் குற்றவாளிகளே!

Continue reading

புதிப்பில் வராத கிடப்புகள்….

உடுக்கை இழந்தவன் கைபோல…..


இன்று இப்பூவுலகின் மூலை முடுக்குகளில் எல்லாம், – சமூக, அரசியல், பொருளாதாரம், சார்ந்த பயங்கரவாதங்களாலும், விடுதலைப் போராட்டங்களாலும், ஆக்கிரமிப்புக்களாலும், – வன்செயல்களும் வான்தாக்குதல்களும்,  இழப்புக்களும் புலம்பல்களும், துன்புறுத்தல்களும் துயரக் கதைகளும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வானளாவி நிற்கின்றன.

இலக்குகளற்ற எறிகணைத் தாக்குதல்களால், கணக்கில்லா வான்தாக்குதல்களால் சொல்லொணாத் தொல்லையுள் தள்ளப் பட்டுள்ளனர். பயங்கரவாதங்களும், ஆக்கிரமிப்புக்களும், விடுதலைப் போராட்டங்களும் செயற்படும் வழிகளில் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே காணப்படுகின்றன. எல்லாவற்றிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிப் பொதுமக்களாவே உள்ளனர். தாக்குதல் தொடுப் போரும் அப்பாவிப் பொது மக்களையே இலக்காக்கிக் கொள்கின்றனர். பணயப் பொருளாகவும் அம்மக்களையே பயன்படுத்துகின்றனர். அனைத்தும் மக்களுக்காகவே செய்வதாகவே அனைவரும் தம்செயல்களை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். Continue reading

கேள்வி – குறள்

1. ஓரே பதில் வேண்டுவதே கேள்விமாறி
மற்றெலாம் பயனில் சொலே

2. கேட்போர் தரமும் கேள்வியின் வகையும்
கேள்விக்கு விடையைப் பெறும்

3. கேள்விக ளென்ப கேட்பதைப் பொருத்தே
கேள்வியாய் எண்ணப் படும்

4. புரிந்திடாக் கேள்வி புரிந்திடார் கேள்வி
அருந்தொணா விருந்து போன்றே Continue reading

புற்று நோயைக் குணப்படுத்த, தடுக்க மாற்றுவழி

மனித உடல் கலங்களால் ஆக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவீர்கள். இக்கலங்களுள் தீமை பயக்கத்தக்க கலன்களும், நன்மை பயக்கத்தக்க கலங்களும், தீயவைகளை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த கலன்களும் நிறைந்தே காணப்படுகின்றன. நம் உடல் அடையும் பல்வேறு மாற்றங்களுக்கு முக்கிய காரணமாயமைபவையும் இக்கலன் களே. இவைகளுள்ளே நாமறியாமலே நம்மனைவரது உடலிலும் புற்று நோயை உருவாக்கக் கூடிய கலன்களும் உண்டு. இவை நமக்குத் தெரிவதில்லை. தரமான வைத்திய பரிசோதனைகளின் போது கூட இவை தெரிய வருவதில்லை. இக்கலன்கள் பல பில்லியன்களாக பெருகும் வரை அவை கண்டு பிடிக்கப்படுவதில்லை. மேலும் இந் நோயால் தாக்கப்பட்டோரைச் சிகிச்சையின் பின்னர் பார்வையிடும் வைத்தியர், நடைபெற்ற வைத்திய பரிசோதனை அறிக்கைகளின்படி இனி அந்நோயாளிக்குப் புற்று நோய் வராது. அதற்கான கலன்கள் எதுவு மில்லை என்று கூறுவர். ஆனால் அது உண்மையுமல்ல. அந்த வைத்தியர் கூறியது பொய்யுமல்ல. ஆக வைத்திய பரிசோதனையில் கண்களுக்கு அகப்படாத கலன்கள் நம்முடலுள் இருக்கும் என்பது யதார்ததம். அத்தகு கலன்கள் பல்கிப் பெருகியோ அன்றி வளர்ச்சி யடைந்தோ பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கக்கூடிய அளவை அடைந்த பின்னரே இந்நோய்க் கலன்கள் நம்முடலில் இருப்பது தெரிய வருகிறது. Continue reading