சர்வதே சிறுவர் தினத்தையொட்டிய பிரசுரம்

இத்தா என்பது வல்ல அல்லாஹ்வால் குர்ஆனில் பெண்ணினத்துக்கு ஓர் அருளாக, ஆதரவாகப் பரிந்துரை செய்யப்பட்டு, காத்திருக்குங் காலம் குறிப்பிடப்பட்டுக் (மேலும், உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு விட்டு இறந்து போயிருப்பின், அவர்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்களுக்காகக் காத்திருப்பார்கள் – 2:234 ) கட்டாயமாக்கப்பட்டுள்ள கணவனை இழந்தவர்களுக்கான ஓர் கடமையாகும். மணமுடித்துத் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட ஓர் பெண், தான் தனது கணவனை அவனது இறப்பினாலோ, விவாக விடுதலையினாலோ இழக்க அல்லது பிரிய நேரிடும் சந்தர்ப்பங்களில் – அந்த ஷணத்திலிருந்தே – வயது வேறு பாடின்றிக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய கடமை. இதை நாம், வாசகர் விளக்கம் கருதி ‘கருவறியுங் காலம்’ எனக் குறிப்பிடுவோம். கீழ்க்காணும் திருவசனங்கள் மேற்கண்ட கூற்றை விளக்கப் போதுமானவை. (வசனங்கள் 2:226,228,234,235, 33:49, 65:1,5) விரிவு கருதி வசனங்கள் தரப்படவில்லை ). Continue reading