Daily Archives: September 30, 2013

ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேதங்களும

இன்று நாம் பார்க்கும் இந்து சமயத்தைத் தமது மார்க்கமாகக் கொண்டுள்ள மக்கள், பல தெய்வக் கோட்பாடுகளுக்குள் தம்மை முழு மையாக ஆழ்த்திக் கொண்டுள்ளனர் என்பதை நாடெங்கிலும் காணப்படும் வெவ்வேறு தெய்வங்களுக்கான கோயில்களும், நாள் தவறாது நடைபெறும் திருவிழாக்களும், மற்றுமுள்ளவைகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக் கின்றன. இவைகள்தான் இந்து சமய வேதங்கள் கூறும் கொள்கைகளா என எண்ணிப் பார்த்தால் விடை எதிரிடையான தாகவே காணப்படுவதை அவதானிக்கலாம்.

இந்து சமயம் என நாமழைக்கும் இந்த பெயர், இடைப்பட்ட காலத்தில் வெள்ளயைர்கள் ஆட்சிக் காலத்தில், அவர்களால் சனாதன தர்மத்துக்குக் கொடுக்கப்பட்டதாகவே தெரிகின்றது. இந்து மத வேதங்கள்தான் ஆதியானவை அல்லது ஆதி மதத்துக்கு அடுத்தபடியாகத் தோன்றியவையாக இருக்க வேண்டும். ஆயினும், நிச்சயமாக, முக்கிய மூன்று வேதங்களான தோறா, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றுக்கும் முந்தியதாகவே உள்ளது. இதற்குப் பிந்திய வேதங்கள் யாவும் யாரோ ஒரு இறை தூதர் மூலம் இறைவனால் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இந்து வேதங்கள் மட்டும் ஒரு புறநடையாகவே இருப்பதையும் அவதானிக்கலாம். Continue reading

விரோதியின் வீழ்ச்சியில் விதைக்கப்படும் எழுச்சி நிலையானதா?

இந்த தலையங்கம் பரந்துபட்ட உண்மைகளைத் தன்மேல் தாங்கி நிற்பது. அவை அனைத்தையும் விளக்கப் புகின் எனது இலக்கின் நோக்கம் தடம் மாறிவிடும் என்பதால் தடுமாற்றம் தவிர்க்க, விளக்கத்துக்குத் தேவையான அளவில் குறிப்பிட்ட சில உண்மைகளைச் சுருக்கமாக எழுதவுள்ளேன். உய்த்துணரின் உண்மை விளங்கும்.

ஓன்று இருக்கும் இடத்தில் இன்னொன்று இருப்பதில்லை என்பது பொது விதி. ஓன்றின் அழிவிலேயே இன்னொன்று உருவாகின்றது எனவும் கூறலாம். இயற்கை உண்மையில் இப்பாடத்தை நமக்குக் கற்றுத் தந்துள்ளதா என்றால், அது நமது விளக்கத்தின் பிழையே தவிர வேறில்லை என்றே கூற வேண்டியுள்ளது. மனிதன் உலகில் எதனையும் புதிதாகப் படைத்து விடுவது இல்லை. ஒன்றில் நாம் அறியாதிருந்தவைகள் தாமாக வெளிப்பட்டிருக்கும் அல்லது புறத் தூண்டல்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அன்றேல் ஒன்றில் இருந்து இன்னொன்று உருவாகி அல்லது உருவாக்கப்பட்டு இருக்கும். உருவமாற்றம், அல்லது கலப்பு நடந்திருக்கும். ஆயினும் அங்கு எதுவும் முற்றாக அழிந்து விடுவதில்லை. அதனாலேயே மனிதன் அழிந்ததாக நமக்குத் தெரிந்தாலும் அவனது எச்சங்கள் அதனையே வெளிப்படுத்த வல்லன என்ற விஞ்ஞான உண்மைகள் விளம்பி நிற்கும். விதிவிலக்குகளும் உண்டே. இந்த அழிவுகளும் ஆக்கங்களும் பல்வேறு வழிகளில் கையாளப்படுகின்றன. Continue reading

Names of PHOBIAs and Explanations

Names of  PHOBIAs and Explanations

Research proves that 60 per cent of women fake an orgasm during intercourse. Which clearly proves that if you are scared of having sex, then you are not the only one.

And not just women, many men too (as against the popular misconception) can fear sex. But what are the different kinds of sex-related phobias that people have? We explore… Continue reading

அல்லாஹ் கூறும் தொழுகையாளிகளின் பண்புகள்.

குர் ஆன் வழியில் …

அல்லாஹ் கூறும் தொழுகையாளிகளின் பண்புகள்.

புனித குர்ஆனில் நரகம் அழைக்கும் மனிதர்களை சுருக்கமாக புறமுதுகு காட்டிப் புறக்கணித்தவன், சேமித்துப் பதுக்கிக் கொண்டவன், தீங்கொன்று அவனைத் தொட்டால் பதறுகிறவனாக, நன்மை தொட்டால் தடுத்துக் கொள்கிறவனாக எனக் கூறிவிட்டு, அப்படி அழைக்கப்படாதோர் வரிசையில் தொழுகையாளிகளைக் குறிப்பிட்டுள்ளான். 70:21 தொழுகையாளி களைத் தவிர எனக் கூறுவதைக் கவனிக்க. மேலும், அதே வரிசையில் அத்தொழுகையாளிகள் எத்தகையவர்கள் என அவர்களின் பண்புகளை விளாவாரியாகத் தெரிவித்துள்ளான். Continue reading

முஸ்லிம்கள் குர்ஆனைப் புறக்கணித்துவிட்டு எங்கே சென்று கொண்டிருக்கின்றனர்?

கட்டுரையுள் புகமுன் அறிதலுக்காகச் சில ஆயத்துக்கள் … ‘இன்னும், ஈமான் கொண்டு, நற்செயல்களை ஆற்றி, முஹம்மது (ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்டதை, அது தங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ள உண்மையாய் இருக்கும் நிலையில் ஈமான் கொண்டார்களோ, அவர்களின் தீமைகளை, அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலைமையையும் அவன் சீராக்கிவிட்டான்.’ – 49:2.

‘அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்த்திட வேண்டாமா? அல்லது, இதயங்கள் மீது பூட்டு இருக்கின்றனவா?’ – 47:24.

‘இ(ந்த குர்ஆனான)து மனிதர்களுக்கு எத்திவைத்தாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், மேலும் அவன் ஓரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லறிவு பெற்றிடவுமாகும்’ – 14:52.

‘மேலும், இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களால் கற்பனை செய்யப்பட்டதல்ல. அன்றியும், முன் உள்ளதை உண்மைப்படுத்துவதாகவும், வேதத்தை விவரிப்பதாகவும் இருக்கிறது. அகிலத்தாரின் ரப்பிடமிருந்துள்ள இதில் எந்த சந்தேகமும் இல்லை.’ – 10:37

‘நிச்சயமாக இந்தக் குர்ஆன், எது மிக மிக நேர்மையானதோ அதன்பால் நேர்வழி காட்டுகின்றது. அன்றியும், நற்செயல் செய்துவரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் கூலி உண்டென்று நற்செய்தி கூறுகிறது’ – 17:9. Continue reading