Monthly Archives: September 2013

சித்த மருத்துவக் குறிப்புகள்

சித்த மருத்துவக் குறிப்புகள்

1.நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2.தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3.தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4.தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5.வாய் நாற்றம்:
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். Continue reading

மனிதர் மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்

மனிதர் மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்

அல்குர்ஆன் 21:1 ” மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு நெருங்கி விட்டது. அவர்களோ மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்.“

இது ஓர் அபாய அறிவிப்பு. ஆம் மறைவான எச்சரிக்கையுடன் கூடியது. மறதியில் உள்ளவர்கள் நாம் என்ற நம் குறையைச் சுட்டிக்காட்டி, நாம் மறந்த எதையோ ஞாபகப்படுத்துமாறு மனிதரைத் தூண்டிக் கொண்டிருக்கும் பண்புடன், தனது கிருபா கடாட்சத்தை வெளிப்படுத்தி நிற்கும் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவின் நெருங்கிவிட்ட மறுமை யையும். அங்கு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டி இருப்பதையும் பறை தட்டும், அருளும் பொருளும் பொதிந்த அற்புதமான அழைப்பு.

மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு நெருங்கிவிட்டது எனக் கூறும் முறை, இவ்வுலகு சீக்கிரம் அழியப் போகின்றது என்ற அபாய அறிவிப்பைச் செய்கின்றது. மறுமையில் நடக்கவிருக்கும் கேள்வி கணக்கிற்கு நம்மிடம் என்ன இருக்கின்றது? என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் உள்ளது. நம்மிடம் கேட்கப்படவுள்ள கேள்வியும், தீர்க்கப்படவுள்ள கணக்கும்தான் என்ன? Continue reading

ஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருமா!

ஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருமா!

ஒரு மனிதன் இஸ்லாமியனாக ஆவதற்கு ஆறு காரியங்களில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவை அனைவரும் அறிந்தவை. ஆயினும், விளக்கத்துக்காக: அல்லாஹ்வை, அவனது வானவர்களை, அவனது வேதங்களை, அவனது திருத்தூதர்களை, இறுதிநாளை, விதியை, தீர்ப்பை நம்பிக்கை கொள்ள வேண்டும் .

இவ்வாறான விடயங்கள் உண்டு என்பதை அறிவதற்குள்ள ஓரே ஊடகம், அல்லாஹ் நமக்கருளியுள்ள வேதங்களாகும். வேத வெளிப்பாடுகளின் இறுதிக்கால மக்களாக நாம் இருப்பதால், இஸ்லாத்தையே நமக்குரிய வேதமாக அல்லாஹ் தேர்ந்து விட்டதாகக் கூறுகிறான். அதிலேயே நமக்கு விடிவு இருப்பதாகவும், அதல்லாதவற்றால் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் தெளிவாகவே தெரிவித்துவிட்டான். காரணம் இறுதி வேதமாகவும், சம்பூரணமான தாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் குர்ஆன் ஆக்கப்பட்டுள்ளதே! Continue reading

புனித குர்ஆனை விமர்சனத்திற்கு உட்படுத்த முடியுமா!

புனித குர்ஆனை விமர்சனத்திற்கு உட்படுத்த முடியுமா!

இன்று உலகளாவிய ரீதியில் மாற்று மத சகோதரர்களாலும், இஸ்லாமிய எதிரிகளாலும், ஏன் முஸ்லிம்கள் சிலராலும் கூட செய்யப்படும் மிக மோசமான விமர்சனங்களுக்கு முழுமையாக முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓரே மார்க்கம் இஸ்லாமும் அதன் வழிகாட்டியான புனித குர்ஆனுமேயாம். இதற்கான காரணங்களைக் கூறுமுன், இஸ்லாம் பற்றி இரண்டொரு வார்த்தைகள் கூறிச் செல்லலாம் என நினைக்கிறேன்.

இஸ்லாம் இறுதி மார்க்கம். எழுத வாசிக்கத் தெரியாத இறுதி நபியும், ரசூல் என்ற இறைதூதருமான நபிகள் கோமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூலம் அரபிப் பாஷையில் கிபி ஆறாம். நூற்றாண்டின் பிற்பகுதியில் பகுதி பகுதியாக இறைவனால் அவனது வானவர் மூலம் இறக்கப்பட்டு, 23 வருடங் களாக நபிகளாரால் நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்டது. Continue reading

தமிழ் அழிந்து கொண்டிருக்கும் பொறுப்பைத் தமிழரே ஏற்க வேண்டும்

                                           தமிழ் அழிந்து கொண்டிருக்கும் பொறுப்பைத்                                             தமிழரே ஏற்க வேண்டும்

மொழிக்கு சட்டரீதியான அந்தஸ்துக்கள் கொடுப்பதனால் அதனைப் பாதுகாக்கலாம் என யாராவது எண்ணுவாரேயாகில் அவர்கள் நிஜவுலகில் வாழாமல் கற்பனையுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள் என்று துணிந்து கூறலாம். வருடமொரு முறை தமிழாராய்ச்சி மாநாடுகள் என்ற பெயரில் விழாக்கள் நடத்தப்படுவதால் தமிழ் வளர்கின்றது என நினைப்பதும் முன்னையதைப் போன்றதே. ஆவணங்களாக்கப்படுபவை ஓர் காலத்தில் தடயங்களாக, சுவடுகளாக, ஆதாரங்களாக, மொழி என்ற ஒன்று இருந்ததாக நிரூபிக்க உதவுவதாக இருக்கலாம். தவிர மொழி வாழ்வதற்கு அது எவ்வகையிலும் உதவிடப் போவதில்லை.

மொழி என்பது பேச்சை முழுமுதலாகக் கொண்டது. மனிதன் தோன்றிய காலத்திலேயே, எழுத்துருப் பெறும் முன்னரே மொழிகள் தோன்றிவிட்டன. ஆரம்பத்தில் இறைவன் ஆதம் என்ற முதல் மனிதனுக்கு பொருட்களின் பெயரைக் கற்றுக் கொடுத்தாகத் தெரிகிறது. இதிலிருந்து, மனித படைப்பின் ஆரம்பத்திலிருந்தே மொழிகள் இருந்தமை தெளிவாகின்றது. அடுத்தவருக்கு அதன் வெளிப்பாடு ஆரம்பத்தில் சைகை மூலமாக சென்றடைந்து இருந்திருக்கும். இவை சைகை மொழியாக வளர்ந்திருக்கும். இன்றும் சைகை மொழிகள் உலகெங்கும் காணப்படுவது இதனை மெய்ப்பிக்கும். இக்காலத்தில் செவிப்புலன் அற்றோருக்காக இவை பாவிக்கப்படுகின்றன. Continue reading

முஸ்லிம் அல்லாதோருக்கும் தர்மம் (ஸதக்கா) ஏழைவரி (ஸக்காத்) வழங்கலாமா?

குர்ஆன் வழியில்…

முஸ்லிம் அல்லாதோருக்கும்
தர்மம் (ஸதக்கா) ஏழைவரி (ஸக்காத்) வழங்கலாமா?

நாமறிந்தவரை தர்மத்தை யாருக்கும் வழங்கலாம் என்றவாறும், ஸக்காத் என்ற ஏழைவரியை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கலாமெனவும் கருதி முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, அவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்திவரும் முறையில் இருந்து கண்டு கொள்ளக் கூடியதாயுள்ளது. இந்த நடைமுறை சரியானதா? முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஏழைவரியில் இருந்து வழங்கலாமா என்பதை குர்ஆனின் அடிப்படையில், உள்ளதை உள்ளவாறு ஆராய்வதே இக்கட்டுரை.

உலக மாந்தரின் உய்வுக்காக இறக்கி அருளப்பட்ட மாமறையில் ஓரவஞ்சகமாக முஸ்லிம்களுக்கு மட்டும் ஸக்காத்தைக் கொடுங்கள் என கருணை நாயன் வல்ல அல்லாஹ் நம்மைப் பணித்திருப்பானா? இக் கேள்வியும் என் மனதைத் துளைத்துக் கொண்டிருந்த கேள்விகளில் ஒன்று. அதனைக் கண்டறிய அவனின் யாப்பு என்ன கூறுகிறது என்பதை யறிய குர்ஆனில் உரசிப் பார்த்த பொழுது பல்வேறு உண்மைகள் கேள்வி களாய் எழுந்து வருகின்றன.

Continue reading

பிழைகளும் சரிகளும்

பிழைகளும் சரிகளும்

பிழைகள் எல்லாம் பிழைகளுமல்ல. சரிகள் எல்லாம் சரிகளுமல்ல. பிழைகளில் சரியுமுண்டு. சரிகளில் பிழையும் உண்டு. பிழைகள் சரியாவதும் உண்டு. சரிகள் பிழையாவதும் உண்டு. பிழைகளாகத் தெரிவதெல்லாம் பிழைகளுமல்ல. சரிகளாகத் தென்படுவதல்லாம் சரிகளுமல்ல. சரியொன்றை இன்னொரு சரி, உண்மைப்படுத்துவது இல்லை. காரணம் இரு சரிகள் ஒன்றில் காணப்படாது. அது போன்று சரியொன்றை இன்னொரு சரி பிழையாக்குவதும் இல்லை. ஒரு சரியை ஒரு பிழை உண்மையாக்கவும் செய்யும், அது போன்று ஒரு சரியை பிழையொன்று பிழையாக்கிடவும் முடியும். சில விதிவிலக்குகளும் உண்டே!

வெளிச்சத்தில் பல நிறங்களில் தோற்றம் தந்த பொருளொன்று, இருட்டில் மறைந்து அல்லது கறுப்பாகத் தோற்றம் தருவதில் பிழை சரி தீர்மானிக்க முடியாததாகி விடுகிறது. இரண்டு நிலைகளிலும் இரண்டு தோற்றங்களும் சரியென்பதும் பிழையான முடிவே! இரண்டு சரிகள் ஒன்றில் காணப்படாது. இவை சர்ச்சையை வளர்க்குமே தவிர உண்மையை அடைய விடாது. Continue reading

மனிதரைப் பாதிக்கும் ஸ்ட்ரோக் – ஒரு பார்வை….

மனிதரைப் பாதிக்கும் ஸ்ட்ரோக் – ஒரு பார்வை….

ஸ்ட்ரோக் என்ற மூளையிலுள்ள கலன்களுக்கு இரத்தத்தால் எடுத்துச் செல்லப்படும் பிராணவாயுத் தடையால் அன்றி பிராணவாயுக் குறைவால் திடீரென ஏற்படும் கலனின் இறப்பால் ஏற்படுவது. இந்த நிலை, எதிர் பாராத விதமாக மூளைக்கு இரத்தம் செல்லும் குழாயில் ஏற்படும் தடையால், அல்லது மூளையின் கலன்களுக்கு இரத்தத்தை எடுத்துச் சென்று பிராண வாயுவால் போஷிக்கும் குழாய்களில் ஏற்படும் திடீர் வெடிப்பு போன்றவையால் உருவாகின்றது.

இந்தத் தாக்குதலின் காரணமாக, நோயாளி பேச முடியாத நிலையை அல்லது ஞாபக சக்தியை இழந்துவிடும் நிலையை அல்லது முழு உடலினதும் ஒரு பக்கம் செயலிழந்து போகும் நிலையை அடையலாம். Continue reading

இஸ்லாமிய பெருநாட்களில் இழுபறிகள்…

பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டமைக்கு,அடிப்படையை விளங்காமையே காரணம்

இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒருவர் அது பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இஸ்லாம் என்ற வாழ்வியல் திட்டம் உலகில் மனிதப் படைப்பு தோன்றிய போதே வேதங்களாகவும் கட்டளை களாகவும், நபிமார்கள், தூதுவர்கள் மூலமாக காலத்துக்குக் காலம் தேவைக்கு ஏற்ப இறைவனால் இறக்கி அருளப்பட்டவையே! இவையனைத்தையும் குர்ஆனின் தாய் எனப்படும் உம்முல் கிதாபில் அல்லாஹ் பதிந்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளான். இறுதியாக அனைத்து வேதங்களில் கூறப்பட்டவையும் தனது இறுதி நபி முஹம்மது ஸல் அவர்கள் மூலம் வெளிப்படுத்தினான். குர்ஆன் அப்படி வெளிப்படுத் தப்பட்ட ஒன்றே தவிர வேறல்ல என்றும் மிகவும் வலியுறுத்திக் கூறி யுள்ளான். நபிமார்களும், தூதுவர்களும் தமக்கு இறக்கி வைக்கப்பட்ட வற்றை வெளிப்படுத்த அவனால் தேர்ந்தெடுக் கப்பட்ட சாதாரண மனிதர்களே என்பதும் அவனது கூற்றே! நபிமார்களோ, தூதுவர்களோ அவர்கள் போதித்த வேதங்களின் உரிமையாளர்கள் அல்லர் என்பதை நன்கு மனத்தில் இருத்திக் கொள்ளல் மார்க்கத்தை அறிவதில் மிக அவசியம் தேவைப்படுவது. அவர்களும் தாம் போதித்த இறை செய்தி களான வேதங்களைப் பின்பற்றியவர்களே என்பதே யதார்த்தம்!

நேர்வழி என்பது அல்லாஹ்வின் வழி என்பதால், இறுதி மார்க்கமாக வெளிப்படுத்தப்பட்டு, இறைவனால் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய வேத நூலான புனித குர்ஆனே அந்தத் தகைமையைக் கொண்டது. அது அல்லாஹ்வின் வழிகளைக் கூறிக் கொண்டிருப்பது. அதனையே நாம் அல்லாஹ் வின் சுன்னா(வழி) என அரபியில் காண்கின்றோம். நான் ஏற்கனவே கூறியது போல் நபிமார்கள் பின்பற்றிய வழி எனப்படும் சுன்னாவும் அல்லாஹ்வின் சுன்னாவே! அல்லாஹ்வை நேசிப்போர் எனது சுன்னாவைப் பின்பற்றுவர் என நாயகம் ஸல் அவர்கள் கூறியிருக் கின்றார்கள் என்றால் அந்த வழி அல்லாஹ்வின் வழியே தவிர வேறு வழியில்லை. நபிமார்களுக்கு என்று தமது சொந்த வழிகள் எதுவு மில்லை.

46:9 – “நான் தூதர்களில் புதுமையானவனல்ல. மேலும், என் தொ டர்பாகவும், உங்கள் தொடர்பாகவும், என்ன செய்யப்படும் என்பதை நான் அறிய மாட்டேன். என்பால் வஹீ அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றுவதில்லை. மேலும், நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேயன்றி இல்லை!“ Continue reading