இப்பிரபஞ்சத்தில் மனித தோற்றம் நிகழ்ந்த காலமுதல், மனுக்குலத்தின் உயர்வுக்காக வல்ல அல்லாஹ்வால், முதல் மனிதன் ஆதம் (அலை) முதல், இறுதி நபி முகம்மது (ஸல்) அவர்கள் வரையில் தோன்றிய அனைத்து நபிமார்களுக்கும் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களின் சீரான, நேரான வாழ்வுக்காக வேதங்களையும், வேதக் கட்டளைகளையும் அவ்வப்போது வழங்கி ஈடேற வழிவகுத்தான். அந்த வகையில் வழங்கப்பட்ட அனைத்து வேதங்களையும் மெய்ப்படுத்துவான் வேண்டி, (குர்ஆன் 3:3 இதற்கு முன்னுள்ளவற்றையும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வேதத்தை உண்மையைக்கொண்டு உம்மீது அவன்தான் இறக்கிவைத்தான்.) தனது இறுதித் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இறுதி வேதமாகிய இஸ்லாத்தை 6237 வசனங்களைக் கொண்ட புனித குர்ஆன் மூலம் இறக்கித் தனது அருளை தனது மக்களுக்கு முழுமையாக்கினான்.‘…இன்றையதினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்குப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் என்னுடைய அருட்கொடையையும் உங்கள்மீது முழுமையாக்கி வைத்து விட்டேன்..’ குர்ஆன் 5:3.

Continue reading