Category Archives: Health

மருத்துவம் – படித்ததில் இருந்து…

மருத்துவம் – படித்ததில் இருந்து…

 

கொலஸ்ட்ரோல் அடைப்பு, நரம்பு வியாதிகள் நீங்க….

வல்லாரைக் கற்கம்

 

பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, வல்லாரை, உருண்டைப் பிரண்டை வகைக்கு ஐந்து கிராம் அரைத்துக் குளிகை போல் செய்து, காய வைத்துக் காலை, மாலை பாவித்துவர நரம்பு சம்பந்தமான சகல வியாதிகளும் நீங்கும், அத்தோடு கொலஸ்ட்ரோல் ஆல் ஏற்படும் அடைப்பு சுகமாகும்.

 

- நிஹா -

குர்ஆனில் தொழுகை!

குர்ஆனில் தொழுகை!

தொழுகை சம்பந்தமாக இறக்கி அருளப்பட்ட குர்ஆனிய வசனங்கள்!

2:238 தொழுகைகளையும். நடுத் தொழுகையையும் பேணி வாருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்களாக நில்லுங்கள்.

11:114 பகலின் இரு ஓரங்களிலும், இரவிலிருந்து ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நிச்சயமாக நற்செயல்கள், தீயசெயல்களைப் போக்கிவிடும். நினைவுகூர்ந்திடுவோருக்கு இது ஒரு நல்லறிவரையாகும்!

17:78 சூரியன் சாய்ந்ததிலிருந்து, இரவின் இருள் சூழும் வரை தொழுகைகளை நிலைநிறுத்துவீராக! மேலும், ஃபஜ்ர் தொழுகையையும், நிச்சமாக ஃபஜ்ருடைய தொழுகையானது வருகைக்குரியதாக இருக்கிறது.

17:79 நீர் உமக்கு உபரியாக இரவிலும் தஹஜ்ஜுத் தொழுகையைக் கொண்டு நிறைவேற்றுவீராக! உம்முடைய ரப்பு உம்மைப் புகழுக்குரிய இடத்தில் நிலைப்படுத்தப் போதுமானவன்.

20:130 எனவே, அவர்கள் கூறுவதின் மீது நீர் பொறுமையை மேற்கொள்வீராக! இன்னும் சூரிய உதயத்திற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும் உம்முடைய ரப்பை புகழ்ந்து துதிப்பீராக! இரவு நேரரங்களிலும், பகலின் ஓரங்களிலும் நீர் துதி செய்வீராக! நீர் திருப்தி பெறலாம்!

30:17 நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும், நீங்கள் காலைப் பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதித்து வாருங்கள்.

30:18 வானங்களிலும், பூமியிலும் புகழனைத்தும் அவனக்கே உரியன. நீங்கள் முன்னிரவிலும், நடுப்பகலில் இருந்திடும் போதும்.

50:339 ஆகவே, அவர்கள் கூறுகின்றவற்றின் மீது நீர் பொறுமையாக இருப்பீராக! சூரிய உதயத்திற்கு முன்னரும், மறையும் முன்னரும் உமது ரப்பின் புகழைக் கொண்டு துதி செய்வீராக!

50:40 மேலும், இரவின் ஒரு பாகத்திலும் சுஜுதுக்குப் பின்னரும்அவனைத் துதி செய்வீராக!

73:2 இரவில் எழுந்து நிற்பீராக! சிறிது நேரம் தவிர!

73:3 அதில் பாதி அல்லது சிறிது குறைத்துக் கொள்வீராக!

73:4 அல்லது அதைவிட அதிகப்படுத்திக் கொள்வீராக! குர்ஆனை அழகாக நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக!

73:6 நிச்சயமாக, இரவில் எழுந்திருப்பதானது ஒன்றிணைந்திருக்க அது மிக்க வலிமையுடையதாகும். இன்னும் சொல்லால் மிக நேர்த்தியானதுமாகும்.

2:21 மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ரப்பையே வணங்கு(அறி)வீராக! நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.

2:43 மேலும், நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தையும் கொடுத்து வாருங்கள். மேலும், ருகூஉ செய்பவர்களுடன் இணைந்து நீங்களும் ருகூஉ செய்யுங்கள்.

2:110 மே லும், நீங்கள் தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஜகாத்தையும் கொடுங்கள். மேலும், உங்களுக்காக நீங்கள் என்ன நற்செயலை அனுப்பி வைக்கிறீர்களோ அதனையே அல்லாஹ்விடம் அடைந்து கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைக் கூர்ந்து பார்த்தவாறு இருக்கிறான்.

2:239 ஆகவே, நீங்கள் அஞ்சுவீர்களாயின், நடந்தவர்களாகவோ, அல்லது வாகனித்தவர்களாகவோ. அச்சம் நீங்கிவிட்டால், அல்லாஹ் உங்களுக்கு அறியாதிருந்தவற்றைக் கற்றுக் கொடுத்தவாறு அவனை நினைவு கூர்ந்திடுங்கள்.

17:110 நீர் கூறுவீராக! “நீங்கள் அல்லாஹ் என்ற அழையுங்கள், அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள், எதை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு அழகிய திருப்பெயர்கள் உள்ளன. நீர் உம்முடைய தொழுகையில் சப்தமிட்டு ஓதாதீர்.அதில் மெதுமெவாகவும் ஓதாதீர். இன்னும் இவ்விரண்டிற்குமிடையே ஒரு வழியை மேற்கொள்வீராக!

62:9 முஃமின்களே! ஜுமுஆ நாளன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பால் விரைந்து செல்லுங்கள். மேலும், வணிகத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் அறிவீர்களாயின், இதுவே உங்களுக்கு மிக்க மேலானதாகும்.

73:20 நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தினரும், இரவில் மூன்றில் இரண்டு பாகத்தைவிட சற்றுக் குறைவாக, இன்னும் அதில் ஒரு பாதியில், இன்னும் அதில் மூன்றில் ஒரு பாகத்தில் நிற்கிறீர்கள் என்பதை நிச்சயமாக உமது ரப்பு அறிவான். இன்னும் இரவையும், பகலையும் அல்லாஹ்தான் நிர்ணயித்துள்ளான். அதனை நீங்கள் சரியாகக் கணக்கிட முடியாதென்பதையும் அவன் அறிந்துள்ளான். ஆகவே, அவன் உங்களை மன்னித்து வி்டடான். எனவே, குர்ஆனிலிருந்து இயன்றதை நீங்கள் ஓதுங்கள். உங்களில் நோயுற்றவர்கள் இருக்கக்கூடும் என்பதையும் , இன்னும் சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின பாதையில் போரிட நேரிடும் என்பதையும் அவன் நன்கறிவான். எனவே, அதிலிருந்து இயன்றதை ஓதுங்கள். இன்னும் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுங்கள். ஜகாத்தையும் கொடுத்து வாருங்கள். மேலும், அ்ல்லாஹ்வுக்கு அழகிய டனாக கடன் கொடுங்கள். மேலும், நீங்கள் நன்மையானவற்றில் உங்களுக்காக எதை முற்படுத்தி வைப்பீர்களோ, அது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததாகும். கூலியில் மிக மகத்தானதாகவும் அதனை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். மேலும், அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்.

76:26 இன்னும் இரவில் அவனுக்கு சுஜூது செய்வீராக! இரவில் நீண்ட நேரம் அவனைத் துதி செய்வீராக!

107:4 எனவே தொழுகையாளிகளுக்குக் கேடுதான்!

107:5 அவர்கள் எத்தகையோ‌ரன்றால் தொழுகையில் மறந்தவர்களாக இருப்பார்கள்.

107:6 இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், மற்றவர்களுக்குக் காண்பிக்கிறார்கள்!

108:2 எனவே, உமது ரப்பைத் தொழுது, இன்னும் அறுப்பீராக!

4:103 நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால், பிறகு நின்றவர்களாகவும், அமர்ந்தவர்களாகவும், உங்களது விலாப்புறங்களின் மீது அல்லாஹ்வை நீங்கள் துதி செய்யுங்கள். பின்னர், அமைதி பெற்று விட்டால் அப்பொழுது தொழுகையை நீங்கள் நிலை நிறுத்துங்கள். நிச்சயமாக தொழுகையானது இறை நம்பிக்கையாளர்கள் மீது நேரங் குறிப்பிடப்பட்ட கடமையாக இருக்கின்றது.

29:45 இவ்வேதத்தில் இருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதிக் காட்டுவீராக1 இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாகத் தொழுகையாகிறது மானக்கேடானவைகளை விட்டும் வெறுக்கப்பட்டதை விட்டும் தடுக்கும். மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வது மிகப் பெரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கு அறிவான்.

20:14 நிச்சயமாக, நான்தான் அல்லாஹ். என்னையன்றி வணக்கத்திற்குரிய நாயனில்லை. ஆகவே, என்னையே நீர் வணங்கு(அறி)வீ)ராக! மேலும், என்னை நினைவு கூர்ந்திட, தொழுகையை நிலை நிறுத்துவீராக!  

2:153 முஃமின்களே! நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

http://factsbehind.net/wp/?p=536

14:31 ஈமான் கொண்டுள்ள எனது அடியார்களுக்கு எதில் கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லையோ அந்த நாள் வருவதற்கு முன், தொழுகையை அவர்கள் நிலை நிறுத்துமாறும், அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்து கொள்ளுமாறும் நீர் கூறுவீராக! http://factsbehind.net/wp/?p=684

 

 

- நிஹா -

எனக்குப் பிடித்தவை !

எனக்குப் பிடித்தவை !

எனக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பிடிக்கலாம். பிடித்தால் சுவையுங்கள்!

பெண்ணின் பெருமை, அருமையை, உரிமையை, உளப்பாங்கை உய்த்துணருங்கள். இறை படைப்பின், அனைத்தும் மனிதப் படைப்பில். எந்நதப் படைப்பிலும் காண முடியாத, அரிய பெரிய பண்புகள் விரவிக் கிடக்கின்றன. மனித உருவினுள். முடிந்தால் வெளிப்படுத்த முனையுங்கள். உலகே அமைதிப் பூங்காவாக மாறிவிடும். அதுவே இறை நோக்கமும். மறுமையிலும் வெற்றியாளர்களாகி விடலாம். வரவேற்க ஹுருலீன்கள் என்ற பார்வை தாழ்த்திய பருவம் மாறா, கைபடாத கன்னியர் காத்திருப்பர். Continue reading

Health tips – சுவாசப்பையைக் காத்து சுகவாழ்வு பெற சில உணவுகள்.

சுவாசப்பையைக் காத்து சுகவாழ்வு பெற சில உணவுகள்.

நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற காற்றை சுவாசிப்பதற்குக் கருவியாக இருப்பது சுவாசாசயம் எனப்படும் நுரையீரலே. இது தனது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டால் சில நிமிடங்களிலேயே நாம் இறப்பைச் சநத்திக்க வேண்டி வரும். ஆதலால், அதனைத் திடகாத்திரமாக வைத்திருக்க வேண்டியது நமது கடனே! Continue reading

சிறுநீரக கல்லுக்கு எலுமிச்சை சாறு!!

சிறுநீரக கல்லுக்கு எலுமிச்சை சாறு!

 

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்
.
இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!
ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!
அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.
பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி.
1. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), 
2. பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy)
மற்றும் 
3. லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.
“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.

- niha -

from web

 

மருந்தாகும் உணவு!

மருந்தாகும் உணவு!

கொலஸ்ட்ரோலை குணமாக்க
கோரைக் கிழங்கு பவுடர்! 

இன்று உலகை உலுக்கி வரும் உபாதையான மாரடைப்புக்கு முக்கிய காரணிகளில் ஒ்னறாக உள்ளது கொலஸ்ட்ரோல் என்ற கொழுப்பே!

இதி்ல் கெட்ட கொலஸ்ரோல் எல்டீஎல் என்பது குருதியில் கலந்து வெளியேறிடாது, ஆங்காங்கே நரம்புகளில் தங்கி, அவற்றினைக் குறுகலாக்குவதுடன் அடைப்புக்களையும் ஏற்படுத்தி மரணத்தையும் விளைவித்து விடுகின்றது.

அதனால், கொலஸ்ட்ரோலை உணவால் கட்டுப்பாட்டுள் வைத்திருக்கும் முறைகள் நன்மை பயப்பன. அவற்றில் மிக முக்கயமான நடைமுறையாக பசிக்காமல், மற்றும் செரிமானமற்ற நிலையில் புசிக்கும் ‌ பழக்கத்தைத் தவிரத்துக் கொள்ளல் அவசியம்.

உணவாக, மோர் அருந்தி வருதல் இலகுவாகக் கெட்ட கொலஸ்ட்ரோலை வெளியேற்றும் எளிய முறையாகும்.

சாப்பிட்டவுடன் சுடுநீர் குடிக்க வேண்டும. அதிலும் சிறிது மிளகும், இஞசியும் இடித்துப் போட்டு அவித்த சுடுநீரைக் குடிப்பது கொலஸ்ட்ரோலைக் குறைக்க உதவும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு அருந்துவது மற்றொரு உண்ணும் முறை. 

கோரைக் கிழங்கு பவுடர் கிடைக்குமாயின் அதில் ஒரு கரண்டி, அரை கிளாஸ் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து கால் வாசியாகக் குறைந்த பின்னர், காலையும் மாலையும் உணவுக்கு முன்னர் அருந்திவ‌ர நன்மை பயக்கும்.

 

தொகுப்பு – நிஹா

Nail care !

விரலுக்கு அழகையும், பலத்தையும், பாதுகாப்பையும் தரும் நகம்!

நமது விரல்கள் அழகை, பலத்தை, பாதுகாப்பை பெற்றுக் கொள்ள வழிசமைத்துக்கொண்டிருப்பன நமது நகங்களே! நகமில்லாத நிலையை சற்று கற்பனை பண்ணிப் பாருங்கள்! இதற்கு மேலும். கிள்ள, சொறிய, வராண்ட, கீற, கிழிக்க, சுரண்ட என பல்வேறு தேவைகட்கும் நகங்களே நமக்கு உதவியாக இருக்கின்றன! Continue reading

அறிந்திட சில…

அறிந்திட சில…

 

அபத்தைக் காத்து ஆபத்தைப் போக்கு
விபத்தைத் தடுக்க வேகத்தைக் குறை!

சுகத்தையடைய சோகத்தைத் தவிர்
அகத்தைத் திருத்தி இகத்தை வெல்!

பாகமாயச் சமைக்கும் பக்குவமறி
ரோகம் தவிர்க்க போகம் குறை!

ராகம்தானே இசையின் உயிர்
தேகம் இன்றேல் யோகம் ஏது?

தூரம் காண நேரம் அறி
சோரம் போனால் துயரம் வருமே!

பாரமறியப் பலமே தேவை
தாரமிழந்தால் தரமும் குறைவதோ!

ஓரமின்றேல் உருவமும் இல்லை
வீரம் என்பது விவேகம்தானே!

 

- நிஹா -