Category Archives: Religious

நல்லதை அறிந்திட முயன்றால் வல்லவன் உதவியும் கிட்டும்!

நல்லதை அறிந்திட முயன்றால்
வல்லவன் உதவியும் கிட்டும்!

 

நாயகம் அவணியில் உதித்தார்
நறுமணம் உலகில் கமழ
நற்செயல் தந்திடும் நன்மை
நயம்பட மனிதர்க்குரைத்தார்!

Continue reading

QURAN KURAL ! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள் !

 

தேர்ந்தோம் உம்மை செவியுறுவீர் வஹீயை
கூர்வரோ 20:13 பார்!

 

மூஸாவைத் தேர்ந்தான் அல்லாஹ் தனக்காக
பேஸாக 20:41 பார்!

 

படைத்தான் மீட்பான் வெளிப்படுத்துவான் பூமியில்
அடுத்தென்பான் 20:55 பார்!

 

அறியமுடியாதே அல்லாஹ்வைக் கல்வி ஞானத்தால்
புரியவே 20:110 கூறும்!

 

உம்மை நினைவுகூர்த லுள்ளதை விளங்கீரோ
உம்பால் இறக்கிய குர்ஆனில்!                 21:10

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 39:41

நிச்சயமாக, மனிதர்களுக்காக உண்மையைக் கொண்ட வேதத்தை நாம் உம்மீது நாம் இறக்கினோம். ஆகவே, எவர் நேர்வழி பெறுகிறாரோ, அது அவருக்கே ஆகும். எவர் வழி தவறி விடுகிறாரோ அவர் வழி தவறுவதெல்லாம் அவரின் மீதே ஆகும். அவர்களுக்கு நீர் பொறுப்பேற்றுக் கொள்பவருமல்லர்.

– நிஹா -

Al Quran 39:41

Verily We have revealed the Book to thee in Truth, for mankind. He, then, that receives guidance benefits his own soul: but he that strays injures his own soul. Nor art thou set a Custodian over them.

- niha -

 

நற்சிந்தனை 35! குடும்பக் கட்டுப்பாட்டில் குர்ஆனின் பங்கு!

குடும்பக் கட்டுப்பாட்டில் குர்ஆனின் பங்கு!

 

இஸ்லாம் நேரடியாகச் சில விடயங்களை செய்யும்படியும், நேரடியாகச் சில விடயங்களை செய்யாதே என்றும் கூறும்! சிலவற்றில் அவற்றிலுள்ள நன்மைகளையும் தீமைகளையும் கூறும்! ஒரு விடயத்திலேயே தடுக்கப்பட்டதையும், ஆகுமாக்கப்பட்டதையும் கூறும்! சில விடயங்களில் தடுக்கபட்டதையும், விதிவிலக்குகளையும் கூறும்! சில விடயங்களில் அவற்றிலுள்ள நன்மைகளையும் கூறி, அவற்றினால ஏற்படும் பாவங்கள் மிகுதி என்பதால் அவற்றை விலக்கிக் கொள்ளக் கூறும்! சில விடயங்களில் மிகவும் நாசூக்காக அவற்றை அமுல்படுத்தும் விதத்தில் செய்திகளைக் கூறும், அதே வேளை அங்கு நாமறியாமல் ஒரு தடையை ஏற்படுத்தியும் இருக்கும்! இது நிர்ப்பந்தம் செய்யும் நோக்கைக் கொண்டதாக இராது! இவை பற்றி பட்டியல் போட்டுக் கூற முற்பட்டால் அது நாம் கூற வந்ததைவிட்டுச் செல்வதாக முடிந்து விடும். ஆதலால், நமது தலையங்கத்தை விளங்கிக் கொள்வதற்கு இவ்வளவும் போதுமானதாகும் என்பதில் நிறைவு கொள்வோம்!
Continue reading

நற்சிந்தனை 34 ! கலிமா கூறும் ஏகத்துவம் !

இப்பதிவு முநூலில் இருந்து பெறப்பட்டது. பீஜே அவர்களின் ஒன்லைன் கேள்வி – பதில் நிகழ்வில் அல்லாஹ் பற்றிய கேள்வி ஒன்றுக்கு, அல்லாஹ் ஔியாக இருப்பதால் இவ்வுலகில் காண முடியாது. மறுவுலகில், நமக்கு தரப்படும் வேறொரு அமைப்புள்ள கண்களினால் காணலாம் என பீஜே கூறிய கருத்துக்கு, மாற்றுக் கருத்தாகப் பதிவாகி இருந்த குர்ஆனிய உண்மைகளை, வாசகர் நலன் கருதி, இப்பகுதியில் பதிவிடுகிறேன்!

நற்சிந்தனை! 34

கலிமா கூறும் ஏகத்துவம் !

தௌஹீத் என்றால் என்ன என்ற விளங்கிக் கொள்ளாதவரை அல்லாஹ் பற்றிய குழப்பங்களுக்கு அளவே இருக்காது. அதனை விளங்க வைக்கவே வேதங்கள், நபிமார், ரசூல்மார் உலகுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கொணர்ந்த தாரக மந்திரம், லா இலாஹ இல்லல்லாஹ் அதாவது, அல்லாஹ்வைத் தவிர எதுவுமில்லை. நமது நாயகம் ஸல் அவர்களுக்கு அல்லாஹ், நீர் இபுறாஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக எனக் கூறிவிட்டு, இபுறாஹிம் இணைவைப்போராக இருக்கவில்லை என்கின்றான். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் -38:29

 

பாக்கியமிக்க வேதமாகும். இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதை உம்பால் நாம் இறக்கி வைத்தோம்!

 

- நிஹா -

Al Quran 38:29

 

A book which We have sent down unto thee, full of blessings, that they may meditate on in Signs, and that men of understanding may receive admonition.

 

- niha -

Quran Kural ! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள் !

 
அல்ஹம்து லில்லாஹிரப்பில் ஆலமீன் 10:10இல்
அழகான முடிவதான பிரார்த்தனையாமே!

தட்டழிந்திடவே விட்டு வைத்தான் வழிகேட்டிலே
சந்திப்பை நம்பார் தமை! 10:11

அழைத்திடுவான் துன்பம்பரின் அனைத்து நிலையில்
அழையாவா றகல்வா னகன்றிடில் 10:12

அல்லாஹ்வி னோர்நாள் நம்மாயிரம் வருடமென
அல்ஹாஜ் 47இல் அழகாக நவின்றானே!

வானவரேறிடும் அந்நாள் ஐம்பதாயிரம் வருடமென
ஞானவான் நல்கினான் 70:4இல்

நெருங்காதீர் விபச்சாரம் மிகக்கெட்டது மானக்கேடை
வருவிக்கும் என்குது 17:32

என்னைநினைவு கூர்ந்திடத் தொழுகையை நிலைநிறுத்துக
மனிதனைப் பணிக்கின்றான் 20:14இல்

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZ

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 4:142

நிச்சயமாக நயவஞ்சகர்கள் ‌அல்லாஹ்வை வஞ்சிக்கின்றனர். ஆனால், அவனோ அவர்களை வஞ்சிப்பவனாக இருக்கின்றான். மேலும், தொழுகைக்கு அவர்கள் நின்றார்களாயின் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே நிற்கின்றனர். இன்னும் அவர்கள் மிகக் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.

- நிஹா -

Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 29:69

 
மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக நம்முடைய நேரான வழியில் செலுத்துகின்றோம். நன்மை செய்வோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கின்றான்.

 

- நிஹா -

 

Al Quran  29:69

 

And those who strive in Our – We will certainly guide them to Our Paths: For verily Allah is with those who do right. 

 

- niha -